சதீஸ்கரில் யானை தாக்கி 3 பேர் பலி.!

சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் யானை தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக  வன அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பதல்கான் வனப்பகுதில் நேற்று மாலை இந்த சம்பவங்கள் நடந்தது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அந்த வழியில் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும்,உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உடனடியாக ரூ .25,000 உதவி வழங்கப்பட்டது. .