ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை திறந்து வைத்தார் – முதல்வர் பழனிசாமி

ஐ.டி.சி தொழிற்சாலையை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து  முதலமைச்சர் பழனிசாமி  இன்று ஆய்வு சென்றுள்ளார். அங்கு சென்ற முதலமைச்சர்  விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை  திறந்து வைத்தார்.