எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.42,500 கோடி இழப்பு! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

எல்ஐசி பங்குகள் விற்றதன் மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை இன்று பங்குசந்தைகளில் தொடங்கியது. ஐபிஓ முறையில் எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் இனி பங்குசந்தையில் விற்கலாம், அதை விரும்புவோர் வாங்கலாம். ஐபிஓவில் எல்ஐசியின் ஒரு பங்கு ரூ.948 ஆக நிர்ணயம் செய்த நிலையில், பங்குசந்தையில் ரூ.872 ஆக குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எல்.ஐ,சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு.. வரலாறு காணாத வகையில் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 77.73 ஆக சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 77.73 ஆக சரிவை கண்டுள்ளது. எண்ணெய் விலை ஏறக்குறைய 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.45 டாலராக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஐபிஓவான (IPO) அரசு நடத்தும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பட்டியலிலேயே இந்திய … Read more

#LICIPO:இன்று முதல் எல்ஐசி பங்குகள் விற்பனை – ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டம்!

இன்று முதல் (மே 4-ம் தேதி) எல்.ஐ.சி-யின் பொது பங்கு விற்பனை தொடங்கவுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5%  பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் கடந்த பிப்.12-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது.காப்பீட்டு நிறுவனத்தின் … Read more

#JustNow: எல்ஐசி-யின் ஒரு பங்கின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம்!

மே 4-ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள எல்.ஐ.சி-யின் பொது பங்கு ஒன்றின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5%  பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் … Read more