சமூகநீதி விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை மாற்றக்கூடாது – வேல்முருகன்

சமூகநீதி சார்ந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை மாற்றும் அதிகாரத்தை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தந்தது யார்?  சமூகநீதி தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பாரதிதாசன் பல்கலைகழக நியமனத்தில் கடைபிடிக்க கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூகநீதியை சீர்குலைக்க முயற்சித்த அபூர்வாவை உயர்கல்வி செயலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு -தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் , பங்கஜ் குமார் பன்சால்,ஹர்ஷாகே மீனா ஸ்வர்ணா, ஆஷிஷ் வச்சானி உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. அதேபோல, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு  இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது  

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.!

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யத்தொடங்கியுள்ளது. அதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை ! மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.ஆனால்  தமிழகத்தில் ஒரு நாள் முன்னதாகவே இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழக அரசு அறிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை கண்காணித்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட வாரியாக மொத்தம் 42 அதிகாரிகள் நியமனம் … Read more

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,  நுகர்பொருள் விநியோக ஆணையராக இருந்த மதுமதி சமூக நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனர் கண்ணன் நுகர்பொருள் விநியோக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அருங்காட்சியக இயக்குநராக இருந்த கவிதா ராமு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராக … Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் பதிவு செய்யப்பட்ட சங்கமா…? அதிமுக M.P.,M.L.A_க்கள் கேள்வி…!!

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகம்  எழுந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது.இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.இவரின் இந்த கருத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்ததையடுத்து தமிழக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.அப்போது பேசியவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் பதிவு செய்யப்பட்ட சங்கமா..? என்று கேள்வி எழுப்பினார்கள்.