சேற்றில் தான் செந்தாமரை மலரும்! அதுபோல அந்த குடும்பத்தில் கூட நல்ல மனிதன் பிறந்துள்ளார்! – ஹெச்.ராஜா

மு.க.அழகிரி நல்லவர். 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவர் நல்ல முடிவை எடுப்பார் என நினைக்கிறேன். மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், வரும் 20-ம் தேதி மு.க.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடையை மீறி பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, ‘மு.க.அழகிரி நல்லவர். 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், … Read more

தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று கைது செய்யப்பட்ட எச்.ராஜா!

தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று  எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜா.க சார்பில் தமிழகத்தில் நடத்தப்படவியருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பாஜகவினர் அத்து மீறி வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். தடையை மீறி நடத்தப்படக்கூடிய இந்த வேல் யாத்திரையில் கலந்துகொள்பவர்களை தடுக்க போலீசாரும் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் எச்.ராஜா அவர்கள் தலைமையில் இன்று காஞ்சிபுரத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. அங்கு அவர் … Read more

திருமாவளவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்- ஹெச் .ராஜா

பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை … Read more

எனக்கு கட்சியில் புதிய பதவி வழங்குவார்கள் – ஹெச்.ராஜா

எனக்கு கட்சியில் புதிய பதவி வழங்குவார்கள் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  அண்மையில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி நாட்டா வெளியிட்டார்.  அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது. குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை. செய்தி தொடர்பாளர் பட்டியலில் கூட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பாஜக நிர்வாகிகள் … Read more

தேசிய எழுச்சியை முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு தவிடுபொடியானது – ஹெச் .ராஜா

தேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று  தீர்ப்பு  வழங்கியது. அதில், பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல எனவும், அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐ-யால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை. அத்வானி, முரளி … Read more

தேசிய செயலாளர் பதவியிலிருந்து ஹெச்.ராஜா விடுவிப்பு ? பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்

தேசிய செயலாளர் பதவியிலிருந்து ஹெச்.ராஜா விடுவிக்க காரணம் என்னவென்று பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி நாட்டா வெளியிட்டார்.  அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது. குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை. செய்தி தொடர்பாளர் பட்டியலில் கூட தமிழகத்தைச் சேர்ந்த … Read more

இந்தி தெரியாது போடா என்றால் படிக்காமல் இருங்கள் – ஹெச்.ராஜா

இந்தி தெரியாது போடா என்றால் படிக்காமல் இருங்கள் என்று  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில்  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அவர் கூறுகையில், திமுகவில் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கனிமொழியும் ராசாவும் தாங்கள் தனிமைப் படுத்தப் பட்டதாக எண்ணுகின்றனர். இந்தி தெரியாது போடா என்றால், படிக்காமல் இருங்கள்.கிசான் திட்டத்தில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பெயரை அரசு வெளியிட்டு, அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். … Read more

எல்லை மீறுவது கூட்டணிக்கு ஆபத்து.! பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது – ஹெச்.ராஜா

எல்லை மீறி போவது கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல என்று ஹெச். ராஜா பேட்டி. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊரவலத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், அதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அரசு பெரிதும் பெரிதுபடுத்தாமல் இருந்தது. இதனால், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சனம் செய்தார். அதாவது, கர்நாடகா மாநிலத்தில் விநாயகர் சிலைகளை … Read more

தமிழகத்தில் பாஜக தயவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது- ஹெச்.ராஜா

தமிழகத்தில் பாஜக தயவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் தான்  தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவு … Read more

அதிமுக அரசு ஆண்மையான அரசு , அது அவருக்குத்தான் பொருந்தும் – ஹெச். ராஜா கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

ஹெச்.ராஜா சொன்ன சொற்கள், அவருக்குத்தான் பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்  இன்று மீண்டும் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில் … Read more