தொலைதூர கல்வியில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியில்லை.? உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

தொலைதூர கல்வி நிறுவங்களில் பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது.  தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நேரடி கல்லூரி வகுப்பில் பயிலாதவர்கள் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இதுகுறித்து மேலும் கூறுகையில் , தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பயின்று வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் ஆசியராக பணியாற்ற தகுதிஇல்லாதவர்கள். அதற்கு … Read more

அனைத்து பல்.கழகங்களும் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் – உயர்கல்வித்துறை உத்தரவு!

பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்.கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்,தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பாடத்திட்டத்தை மாற்றியமைத்த பின்னர்,தமிழ்,புள்ளியியல்,கணித பாடங்களை மட்டும் ஆய்வு பணிகளுக்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பாரதியார்,வ.உ.சி. பெயரில் ஆய்வு இருக்கை – உயர்கல்வித்துறை உத்தரவு.

பாரதியார் பெயரிலும்,வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரிலும்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.சிண்டிகேட்டின் ஒப்புதலைப் பெற்று பதிவாளர்கள் பணிகளை தொடங்க உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,திருவள்ளுவர்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி,வரும் செமஸ்டர் தேர்வுகளிலேயே 20% தேர்வை காகிதமில்லா முறையில் நடத்தவும் … Read more