மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு.! பதற்றத்தில் வாக்காளர்கள்…

Manipur Polling Gun shoot

Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் தற்போது முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் , புதுச்சேரி உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிகளில் இன்று ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது. மணிப்பூரிலும் காலை … Read more

ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் வெளியேற சீனர்களுக்கு அறிவுறுத்தல்.!

ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் வெளியேறுமாறு சீனக்குடிமக்களுக்கு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. சீனர்கள் அதிகம் சென்று வரும் இந்த ஹோட்டல் மீது குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானை விட்டு கூடிய விரைவில் வெளியேறுமாறு சீனா, தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 5 சீனர்கள் காயமடைந்துள்ளனர் என தகவல் … Read more

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் முக்கியத்தளபதி உட்பட 3 தீவிரவாதிகள் பலி..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய தளபதி உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் டிஆர்எஃப் … Read more

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பாக் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர … Read more

நொய்டாவில் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இரண்டு பேர் கைது..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இருவரை கைது செய்துள்ளனர். நொய்டாவில் பிஸ்ரக் பகுதியில் நேற்று இரவு காவலர்கள் வாகன சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். திடீரென காரில் உள்ள நபர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காரில் இருந்த … Read more

டெல்லி: 6 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட கணவன், உயிருக்கு போராடும் மனைவி..!

டெல்லியில் வினய் தாஹியா என்பவரை 4 சுட்டு கொன்றுள்ளனர். மனைவி கிரண் தாஹியாவுக்கு 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் வெங்கடேஸ்வர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புதுடெல்லி துவாரகாவின் அம்பர்ஹாய் கிராமத்தில் வசிக்கும் தம்பதி வினய் தாஹியா(23)-கிரண் தாஹியா(19). இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஹரியானாவின் சோனிப்பேட்டை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த வருடம் குடும்பத்தினருக்கு எதிராக ஓடிவந்துள்ளனர். பின்னர் புதுடெல்லி வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தாஹியா சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், அவரது … Read more

சத்தீஸ்கர் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சல் சுட்டுக்கொலை..! ஆயுதங்கள் பறிமுதல்..!

சத்தீஸ்கரில் சிறப்பு காவல் படைகளுக்கும், நக்சலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் நக்சல் சுட்டுக்கொலை. சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் இருப்பது குறித்து ரகசிய தகவல் வெளிவந்துள்ளது. அதனால், பஸ்தர் டி.ஆர்.ஜி. சிறப்பு காவல்துறை படைக்கும், நக்சல்களுக்கும் இடையே  நேற்று காலை 8 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. துப்பாக்கி சண்டை முடிந்த பின்னர், அந்த இடத்தில் பெண் நக்சல் ஒருவர் சீருடையோடு இறந்து கிடந்துள்ளார். மேலும், அந்த இடத்தில் ஏ.கே. 47 … Read more

டன்டேவாடாவில் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட் என்கவுண்டர்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் டன்டேவாடா மாவட்டத்தில் பெண் நக்சலைட் ஒருவரை அங்குள்ள பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் பல்லவா கூறுகையில், கெய்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமல்நார் கிராமத்தின் அருகில் காலை 6.30 மணியளவில் நக்சல்களுடன் மாவட்ட ரிசர்வ் காவல்துறையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த துப்பாக்கி சண்டையில் குண்டுகளை மாற்றும் அந்த குறுகிய நேரத்தில் நக்சலைட்டுக்கள் தப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ஒரு … Read more

அமெரிக்க நகரின் வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு.! 18 பேர் காயம்.! 4 பேர் பலி.!

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரை சுற்றி பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி  காவல்துறையினர் கூறுகையில், ‘ நாங்கள் முதல் நபரை அவொண்டேல் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க அன்டோனியோ பிளேர் எனும் நபரை துப்பாக்கி காயங்களுடன் கண்டறிந்தோம்’ எனவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும் கூறினார். மேலும், ஓவர்-தி-ரைன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி … Read more

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட மணிப்பூர் ஐபிஎஸ் அதிகாரி

மணிப்பூர் காவல் துறையின் உயர் அதிகாரி  பிற்பகல் தனது அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மணிப்பூர் கேடரின் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குமார், மணிப்பூர் ரைபிள்ஸ் காம்பவுண்டில் உள்ள தனது அலுவலகத்தில் தனது சேவை ரிவால்வர் மூலம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரவிந்த்குமார் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு) பொறுப்பில் உள்ளார் . இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரவிந்த்குமார்  … Read more