உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் ..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இன்று டெல்லி கிளம்பியுள்ளார். முன்னதாக மயிலாடுதுறைக்கு ஆளுநர் சென்றிருந்த பொழுது கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக ஆளுநர் டெல்லி கிளம்பியுள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மட்டுமல்லாமல், ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் விலக்கு மசோதா ஒப்புதல் கோரி தொடர்ச்சியாக … Read more

திருவள்ளுவர் தினம் : உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர்…!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

#Breaking: “ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு தேவை” – சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்!

சிம்லா:சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பொதுவாக ஆளுநர்கள் அரசுகள் அனுப்பும் கோப்புகள் மீது எந்தவிதமான முடிவுகளையும் எடுப்பதில்லை.அவ்வாறு எடுத்தாலும்  மிகவும் காலத்தாமதமாக எடுக்கிறார்கள்.இதனால்,மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அரசுகளுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது என்று நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சட்டமன்றங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில்,சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை … Read more

பட்டாசு விபத்து: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!

கள்ளக்குறிச்சியில்  ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக, சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் நேற்று இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பேக்கரியில் 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். … Read more

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு….!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார். தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில்  பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் அவர்கள் நியமித்துள்ளார். புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலர் … Read more

தடுப்பூசி போட்டால் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் – புதுச்சேரி ஆளுநர்!

தடுப்பூசி போட்டால் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற நிலையில், கொரோனாவை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல இடங்களில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வரை நாடு முழுவதும் 75 கோடிக்கு மேற்பட்டோருக்கு … Read more

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி வரும் 18ம் தேதி பதவியேற்பு..?

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி வரும் 18-ம் தேதி( சனிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்தார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்கிறார் மேற்கு வங்க கவர்னர்!

மேற்கு வங்க கவர்னர் தங்கார் 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது நடைபெற்ற வன்முறை குறித்து, மேற்கு வங்க கவர்னர் அவர்கள் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போதும் கவர்னர் ஜக்தீப் தங்கார் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை … Read more

ஆளுநர் மாற்றம்? – பீட்டர் அல்போன்ஸ் கருத்து!

தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படுகிறாரா? அவ்வாறு நடந்தால் மத்திய அரசு எப்படி கலந்தாலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிட் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தற்போது முதன் முதலாக தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். இன்று மாலை 4 … Read more

பிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சந்திப்பு..!

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் சென்று இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஆளுநர் இன்று பிரதமரை சந்திக்கிறார். இந்நிலையில் மாநிலத்தின் அரசியல் சூழல் மற்றும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் … Read more