ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு

டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அறிவிப்பு. குளிர்கால விடுமுறைக்காக டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை மூடப்படும் என கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. ஜனவரி 2 முதல் ஜனவரி 14 வரை 9-12 வகுப்புகளுக்கு சிறப்பு அல்லது கூடுதல் வகுப்புகள் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கான (remedial classes) கூடுதல் வகுப்புகளுக்கான காலை மற்றும் மாலை … Read more

அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரார்கள் பெயர் – மாநில அரசு அதிரடி

இந்தூரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் சூட்ட அரசு திட்டம். இந்தூர் அம்பேத்கர் நகரில் உள்ள 234 அரசுப் பள்ளிகளுக்கும் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் கதைகளும் பள்ளிகளில் … Read more

தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் தேர்வு செய்து தமிழக அரசு அறிவிப்பு. 2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வளழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் … Read more

#JustNow: நீட் தேர்வு – தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80% பேர் தோல்வி!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல். NEET – UG தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ இளநிலை படிப்பி சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.3% என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் … Read more

#BREAKING: காலை சிற்றுண்டி – மதுரையில் செப்.15ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரை பள்ளியில் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ள பள்ளியில் தொடங்கி வைக்கிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் … Read more

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவு – ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு. அரசுப்பள்ளிகளில் 9,10-ம் வகுப்புகளைத் தொடர்ந்து, 11, 12-ம் வகுப்பிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்கள் சேராதது உள்ளிட்ட காரணங்களால் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் – அரசாணை வெளியீடு!

ஐஐடி, ஐஐஎம்-க்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவ மாணவிகள் IIT, IIM, AIIMS-களில் சேர்ந்தால் அதன் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் … Read more

இலவச மடிக்கணினி திட்டம் ரத்தாகவில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்தாகவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மடிக்கணினி என்பது பல காலமாக கனவாகவே இருந்து வந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Read more

அரசு அப்பள்ளிகளில் செஸ் போட்டிகளை நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்த ரூ.1 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. இதுதொடர்பான தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச … Read more

#Breaking:இனி அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன. இந்நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும்,பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.