விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்! இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கி இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில், இலங்கையின் விடுதலை புலிகள் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, இங்கிலாந்து அரசுக்கு, தமிழீழ அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் அப்போதைய உள்துறை செயலாளரான சாஜித் ஜாவித், இக்கடிதத்தை நிராகரித்தார். இதனையடுத்து, தமிழீழ அரசு சார்பில், இந்த தடையை எதிர்த்து, இங்கிலாந்தில், தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான, சிறப்பு ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more