தனியார்க்கு தாரைவார்ப்பு- பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு

பொதுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு விற்கும் முடிவினை மத்திய அரசின் கைவிட வலியுறுத்தி ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு காலமுறை ஊதியம்,தொகுப்பூதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ.,26ந்தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இவ்வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் பங்கேற்கும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துறை ஊழியர் சங்க போராட்டக்குழு தெரிவித்துள்ளது.