ஏற்காட்டில் 44-வது கோடைவிழா! மலர் விமானத்துடன் வான்வீரர் அபிநந்தன்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 44-வது கொடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இந்த கொடைவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவை ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். இந்நிலையில், பூங்காவில் கண்ணை கவரும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விலங்குகள், மரங்கள் என பல உருவங்களில் உள்ளது. இதனையடுத்து வான்வீரர் அபிநந்தனை சிறப்பிக்கும் வகையில் அவர் புகைப்படத்துடன் கூடிய, மலர் விமானம் அமைக்கப்பட்டுள்ளது.