#Breaking:புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மோதல் – போலீசார் துப்பாக்கி சூடு..!

புதுச்சேரி இரு தரப்பு மீனவர்களிடையே கடலில் மோதல் ஏற்பட்டதை தவிர்க்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவ கிராமங்களுக்கு இடையே சுருக்குமடிவலை பயன்படுத்துவது தொடர்பாக,இரு தரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது.நடுக்கடலில் அவர்கள் மோதிக்கொண்டனர். இந்நிலையில்,இதனை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.