#BREAKING: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிரியங்கா காந்தி மீது வழக்கு பதிவு..!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 28 மணி நேரமாக வழக்குப்பதிவு செய்யாமல் அடைத்து வைத்திருப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார்;கோடிக்கணக்கில் ஊழல் – FIR தகவல்..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது நெருக்கமானவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் அளித்ததன்மூலம் ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக FIR இல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. வழக்குப்பதிவு: இதனைத் தொடர்ந்து,திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி … Read more

#Breaking: நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு.!

பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறான கருத்து பரப்பும் வகையில் மீரா மிதுன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு. பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய புகாரில் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த … Read more

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மீது வழக்கு பதிவு….!

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மீது வழக்கு பதிவு. மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உலகில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்திய வகை வைரஸ் என்று அறியப்படுகிறது’ என்று கூறியுள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் நாட்டை அவதூறு செய்வதாக கூறி போபால் பாஜக மாவட்டத் தலைவர் சுமித் பச்சூரி மற்றும் இரண்டு பாஜக எம்எல்ஏக்களான விஸ்வாஸ் சாரங் மற்றும் ராமேஸ்வர் சர்மா … Read more

இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபர்..!

இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.மேலும்,பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடந்து,இமாச்சலப் பிரதேசமும் தங்கள் மாநிலத்திற்குள் வருபதற்கு ‘இ-பாஸ்’ முறையை கட்டாயமாக்கியுள்ளது.மேலும்,பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே ‘இ-பாஸ்’ அனுமதி என்றும்,அதன்படி வருபவர்கள் 7 நாட்கள் … Read more

#BREAKING: வெற்றியை கொண்டாடினால் வழக்கு பதிவு, இடைநீக்கம் செய்யுங்கள் -தேர்தல் ஆணையம் உத்தரவு..!

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள பகுதியில் இருக்கும்  அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என 5 மாநில தலைமை செயலாளருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அவசரக் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள பகுதியில் இருக்கும்  அதிகாரிகளை … Read more

#BREAKING: கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு..!

டெல்லி காவல்துறை காலநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது … Read more

#BREAKING: உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு..!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜலட்சுமி சென்னை காவல் நிலை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் முதல்வர் குறித்தும் சசிகலா குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ராஜலட்சுமி இதுதொடர்பான வீடியோவையும் போலீசாரிடம் … Read more

டெல்லியில் கன்று குட்டியை அடித்த நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு!

டெல்லியில் கன்றுக்கட்டியை அடித்த நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். டெல்லி கிழக்கு பகுதியில் கன்று குட்டி ஒன்றை ஒருவர் அடிப்பது குறித்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த நிலையில் கிடந்த கன்றுக்குட்டியை காப்பாற்றி மருத்துவ பரிசோதனைக்காக அருகிலிருந்த சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை … Read more

உத்திரப்பிரதேச மத மாற்ற எதிர்ப்பு சட்டம் – ஒரே வாரத்தில் 6 எப்ஐஆர் பதிவு!

உத்திரபிரதேச மாநிலத்தில் மத மாற்ற எதிர்ப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட ஒரே வாரத்துக்குள் இதுவரை ஐந்து மாவட்டங்களில் 6 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத், வற்புறுத்துதல் மற்றும் பண மோசடி ஆகியவற்றால் மேற்கொள்ளப்படக் கூடிய மதமாற்றம் மற்றும் உடனடி திருமணம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத மாற்ற எதிர்ப்பு சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இந்த மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின்படி ஒரு இந்து மதம் அல்லது கிறிஸ்தவ மதப் பெண்ணை … Read more