பொங்கல் தொகுப்பில் ஏன் நிதி உதவி அறிவிக்கப்படவில்லை – ஓபிஎஸ் கேள்வி!

பொங்கல் தொகுப்பில் நிதி உதவி குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழக அரசு வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவது தொடர்பான ஆணையை பிறப்பித்துள்ளது. அதன்படி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் பொங்கல் நிதி வழங்கப்படாதது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

உத்தரகாண்ட் சாலை விபத்து – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிதி உதவி அறிவிப்பு!

உத்தரகாண்ட் சாலை விபத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் பிரதமர் நிதி உதவி அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் எனும் இடத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 … Read more

திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்த பெண்ணுக்கு திமுக சார்பில் நிதியுதவி..!

திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திகடன் செய்த பரமக்குடி பெண்ணுக்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது.இதில்,திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் 7ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில்,ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பொதுவகுடியில் வசிக்கும் வனிதா என்ற பெண்,தமிழக சட்டமன்ற … Read more

உயிரிழந்த தூத்துக்குடி போலீஸ் சுப்ரமணியம் குடும்பத்துக்கு 86.50 லட்சம் தென்மண்டல போலீஸ் சார்பில் நிதி உதவி!

ரவுடியை பிடிக்கச் சென்ற போது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட தூத்துக்குடி போலீஸ் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு தென்மண்டல காவல்துறையினர் சார்பில் 86 6.50 லட்சம் நிதி உதவி. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியான துரைமுத்து என்பவரை கடந்த 18ம் தேதி தனிப்படை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது ரவுடி துரைமுத்து வீசினார். இந்த சம்பவத்தில் போலீசார் சுப்பிரமணியன் அவர்கள் உயிரிழந்துள்ளார், … Read more

துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் தமிழக முதல்வர்!

துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் தமிழக முதல்வர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். … Read more

கொரோனா வைரஸ்.! மருந்தை கண்டுபிடிக்க ரூ.100 கோடியை வழங்கிய அலிபாபா நிறுவனர்.!

சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 170 பேர் உயிரிழந்தும், 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இதற்கு சீனா உள்ளிட்ட பல்வேறு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதியை, அலிபாபா நிறுவனத்தின், நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது புதியதாக கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் … Read more