விவசாயி என்று சொல்லி ஏமாற்றும் ‘விஷவாயு’ – மு.க. ஸ்டாலின்

விவசாயி என்று சொல்லி ஏமாற்றும் ‘விஷவாயு’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்கத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி காட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்பொழுது மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்தியில் ஒருவர் பிரதமராக இருக்கிறார். அவர் தன்னை ‘ஏழைத் தாயின் மகன்’ என்று சொல்லிக் கொள்கிறார். இந்த ஏழைத்தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் … Read more

தொடர் அமளி ! மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில், மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக துணைத் தலைவர் அறிவித்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமடைந்து,எதிர்க்கட்சிகள்  கடும் அமளில் ஈடுபட்டனர்.எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.-க்கள் மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். … Read more

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

திமுக தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள்  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் … Read more