இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இலங்கை போலீசாரால் சுட்டுக்கொலை!

அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித ஹேமதிலகவை இலங்கை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இலங்கையில் தேடப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் லொக்காவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்த நிலையில், தற்பொழுது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கொட லொக்காவின் கூட்டாளியான “சோல்டா” என்ற அசித ஹேமதிலக, போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் … Read more

தெலுங்கானா என்கவுண்டர் வழக்கு.. விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாத கால அவகாசம்!

தெலங்கானா என்கவுண்டர் வழக்கின் விசாரணை தொடர்பாக கால அவகாசசத்தை 6 மாதங்களாக உச்ச நீதிமன்றம் நீடித்தது. ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு கால்நடை பெண் மருத்துவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீவைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் பேரை கைது செய்து, அவர்களை என்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணை குழுவை அமைத்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் … Read more

காதலனை சுட்டுக்கொன்ற காதலியின் சித்தப்பா..!

ஹாசன் மாவட்டம் போளூர் தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் மது மேலும் இவரை போல் அதே கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயதுடைய ஒரு பெண் , இந்த நிலையில் இவர்கள் இருவருக்கு மிடையே காதல் நிலவில் காதல் ஏற்பட்டுள்ளது மேலும் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை மது வெளியூருக்கு கடத்தி சென்றார் மேலும் கடத்தி சென்று … Read more

சோபூரில் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

இன்று சோப்பூர் நகரில்  நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சோபூர் நகரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில்  மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். சோபூர் மாவட்டத்தின் ரெபன் பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததாக போலீசார் … Read more

விகாஸ் துபே என்கவுண்டர்! துபே கைது செய்யப்பட்டாரா? சரணடைந்தாரா?

விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா?என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒரு  டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 8 போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், … Read more

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர்! மனைவி மற்றும் மகன் கைது!

ரவுடி விகாஸ் துபே, மனைவி மற்றும் மகன் கைது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே, அவரை பிடிக்க போலீசாரை தனது கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவானள ரவுடி விகாஷ் துபேயை  மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில்  நகரில் நேற்று பிடிபட்டார். இதனை தொடர்ந்து, அவரது மகன் மற்றும் மனைவி இருவரும் நேற்று மாலை பொலிஸாரால் … Read more

# என்கவுன்டர் # உறுதி செய்தது உ.பி. போலீஸ்!

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் , 8 போலீசார் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய  கான்பூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  ரவுடி  விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் உ.பி போலீசார் உறுதி செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒரு  டி.எஸ்.பி., … Read more

# அறிவிப்பு#ரவுடி தலைக்கு 2.50 லட்சம் பரிசு

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் ,8 போலீசார் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய  கான்பூர் என்கவுன்டர் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடி கும்பலுடன் தொடர்புடைய, மேலும் 3  போலீசார் அதிரடியாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இந்த துப்பாக்கி சூட்டில்  ஒரு  … Read more

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, உலக நாடுகள் முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இருப்பினும் இந்த வைரஸ் நோயின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில், உலக அளவில் இதுவரை 3,138,886 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218,010 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால், வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் அதிக அளவில் … Read more

பெங்களூருவில் பரபரப்பு..! இன்ஸ்பெக்டரை சுட்டு விட்டு ஓட முயன்ற தமிழக ரவுடி என்கவுண்டர்.!

பெங்களூருவில் பரத் (ரவுடி)  தினேஷ் என்ற  இன்ஸ்பெக்டரை விட்டு ஓட முயன்ற முயற்சி செய்தார் . இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். பெங்களூரு  சேர்ந்த பரத் என்பவர் பிரபல ரவுடி இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவரது மீது  கொலை, கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உள்ளன.இதனால் பரத் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.கடந்த 22-ம் தேதி உத்தரபிரதேச  பதுங்கி இருந்த பரத்தை பெங்களூரு போலீசார் … Read more