#Breaking:”தேர்தல் ஆணையத்தை இன்னும் நாடவில்லை?” – ஓபிஎஸ் தரப்பு திடீர் தகவல்!

அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் … Read more

#Breaking:பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு – தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈபிஎஸ்!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார். மேலும்,இதனையடுத்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி காலை 9.15-க்கு கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.இந்த நிலையில்,அதிமுக பொதுக்குழு மேடையிலிருந்து … Read more

PresidentElection:இன்று முதல் வேட்புமனு தாக்கல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

#Breaking:மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் யார்?-முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் … Read more

#BREAKING: ஜூன் 10 ல் மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன்10ல் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன்10ல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, … Read more

#Breaking:புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் – குடியரசுத்தலைவர் முக்கிய உத்தரவு!

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 24 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட நிலையில்,சுசில் சந்திரா 24 வது தலைமை … Read more

#Breaking:கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது – கூறும் தேர்தல் ஆணையம்!

அரசியல் கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தகவல். அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பது அக்கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவுகளாகும்.மேலும்,தேர்தலுக்கு முன்போ,பின்போ இலவசங்கள் வழங்குவது என்பது கட்சிகளின் கொள்கை முடிவுகளாகும். இதனால்,இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொள்கைகள், முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் … Read more

“ஒரே நாடு,ஒரே தேர்தலை நடத்த தயார்” – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,”ஒரு நாடு ஒரே தேர்தல்” மற்றும் “ஒரு நாடு,ஒரே வாக்காளர் பட்டியல்” குறித்து விவாதங்கள் நடக்கட்டும், அதன்மூலம் ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிவரட்டும்”,என்று முன்னதாக கூறியிருந்தார்.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்ப்பும்,சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன. இதற்கிடையில்,உ.பி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,ஒரே நாடு,ஒரே தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் … Read more

#BREAKING: காலியாகவுள்ள 13 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு..!

ராஜ்யசபா உறுப்பினர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, பர்தாப் சிங் பாஜ்வா, நரேஷ் குஜ்ரால் என பல தலைவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளா, அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகவுள்ள எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் தலா ஒரு இடங்கள் காலியாகவுள்ளது. இதனால்,  … Read more

திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம்அதிரடி..!

திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் கே.சி வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த 25-ம் தேதி அமைச்சர் கே.சி வீரமணியின் சகோதரர் அழகிரி காரில் பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பரிசுப்பொருள்கள் பறிமுதல் பற்றி வழக்குப்பதிவு செய்வதில் ஆளுங்கட்சிக்களுக்கு சாதகமாக டி.எஸ்.பி தங்கவேலு செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. தேர்தல் … Read more