சாக்லேட் வண்ணத்தில் புது ரூ.10 ரூபாய் நோட்டுகள்-ரிசர்வ் வங்கி

    மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து புது ரூ.10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2005 ஆண்டு அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட்(பிரவுன்) நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், … Read more

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு !

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.63.31 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்து ரூ.63.41 … Read more

நிதி ஆயோக்கின் பரிந்துரைப்படி ஏர் இந்தியா பங்குகளை விலக்கி கொள்ள அரசு முடிவு

தொடர் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டு நஷ்டத்திலிருந்து வெளியேறுமாறு நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. அதன்படி தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டு தொடர் நஷ்டத்திலிருந்து வெளியேற நிதி ஆயாக் பரிந்துரைத்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு தொடர்ந்து நிதி உதவி அளிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் மக்களின் வரிப்பணம் ஏர் இந்தியா போன்ற நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சீரமைக்க … Read more

உள்ளூர் உற்பத்தியாளர்களை காப்பாற்ற இறக்குமதி வரியை ஏற்றிய அரசு

சல்போனேடட் நாப்தலீன் பார்மல்டிஹைடு போன்ற ரசாயன பொருட்கள் சீனாவில் இருந்து மிக குறைந்த விலையில் இறக்குமதி செய்யபடுவதால், உள்ளூர் தொழிறசாலைகளும் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். இதனால் அந்த இறக்குமதி பொருட்களுக்கு குவிப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பொருள் குவிப்பு வரி அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கும் பொறுப்பை ஏற்குமாறு டிஜிஏடி துறைக்கு ஹிம்மாத்ரி சிறப்பு ரசாயன தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்தது. விசாரித்து முடிக்கையில், டிஜிஏடி … Read more

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (வியாழன்) 8 காசுகள் சரிந்து 63.61 ரூபாயாக ஆக இருந்தது. அமெரிக்காவில் உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியானதை தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சரிவு கண்டது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, … Read more

புதிய 10 ரூபாய் நோட்டுகளை விரைவில் விநியோகிக்க ரிசர்வ் வங்கி முடிவு!

புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட் நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் 10ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது ரிசர்வ் வங்கி. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களை விநியோகித்த ரிசர்வ் வங்கி, போலி நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவே புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக தெரிவித்துள்ளது. … Read more

நாட்டின் தொழில் உற்பத்தித் துறை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பெருமளவு வளர்ச்சி!

இந்தியாவை பொறுத்தவரை ஜி.எஸ்.டி. வந்தவுடன் பொருளாதார வளர்ச்சி நாட்டின் உற்பத்தி குறையும் என்றே ஒரு கருத்து நிலவி வந்தது .இந்நிலையில் தற்போது அதற்க்கு மாறாக தற்போது நாட்டின் தொழில் உற்பத்தித் துறை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பெருமளவு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 2017 டிசம்பர் மாதத்தில் உற்பத்தித் துறை 54.7 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதனால் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வளர்ச்சி … Read more

ஆன்லைன் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு : மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் உத்தரவு

ஆன்லைன் வர்த்தகம் மூலம் கிடைக்கும் பொருட்களில் போலியானவை அதிகம் வருவதால் ஆன்லைனில் விற்கும் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து உள்ளது மத்திய அரசு. இனி ஆன்லைனில் விற்க்கப்படும் பொருட்களில் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடபட்டிருக்க வேண்டும். மேலும், உற்பத்தி செய்த தேதி, காலாவதி ஆகும் தேதி, உற்பத்தி ஆகும் நாடு, புகார் எண்(கஸ்டமர் கேர்) ஆகிய விவரங்கள் கட்டாயமாக அச்சிடப்பட்டு இருக்கவேண்டும் என மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று … Read more

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை நிலவரம் : 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் – Rs.2,807/- 1 சவரன் -Rs.22,456/- 24 காரட் தூய தங்கம் : 1 கிராம் – Rs.2,948/- 1 சவரன் -Rs. 23,584/- இன்றைய தங்கம் விலை நிலவரம் : 1 கிராம் சில்லறை வெள்ளி – Rs.41.60/- 1 கிலோ பார்வெள்ளி -Rs.41,600/- source : dinasuvadu.com

மும்பை பங்குச்சந்தையில் புத்தாண்டில் வணிகம் ஏற்றத்துடன் தொடக்கம்!

. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்து 34ஆயிரத்து எழுபதாக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 6 புள்ளிகள் சரிந்து 10ஆயிரத்து 524ஆக இருந்தது.2018ஆம் ஆண்டின் முதல் நாளில் மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கியுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஆசியப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், லாபம் தரும் பங்குகளை வைத்திருப்போர் அவற்றை விற்காமல் வைத்துக்கொண்டதும் பங்குச்சந்தையில் பெருமளவு ஏற்றம் இல்லாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. source: dinasuvadu.com