நாய்க்கு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை – தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நாய் உயிரிழந்ததாக உரிமையாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணவூர் பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் தான் 9 வருடங்களாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்டு எனும் நாய் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கடம்பத்தூரில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உள்ளார். அப்பொழுது அவர் அந்த நாய்க்கு கொடுத்த மருந்து காரணமாக அது கோமா நிலையை அடைந்து விட்டதாகவும், … Read more

வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனின் செல்லப்பிராணிகள்!

வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனுடன், மேஜர், சேம்ப் இரண்டு செல்லப் பிராணிகளும் வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளது. கடந்த 20ஆம் தேதி அமெரிக்க நாட்டின் 46 ஆவது அதிபராக பைடன் அவர்கள் பதவி ஏற்றார். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். மேஜர், சேம்ப் என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை தனது செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனுடன், இந்த இரண்டு செல்லப் பிராணிகளும் வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளது. … Read more

பிள்ளைகளுடன் சண்டை …சொத்தில் ஒரு பாதியை நாய்க்கு எழுதி வைத்த தந்தை ..!

மத்திய பிரதேசத்தில் ஒருவர் தனது சொத்தில் ஒரு பாதியை தனது நாய் ஜாக்கிக்கு எழுதி வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஓம் நாராயண் வர்மா என்ற விவசாயிகு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தங்கள் குடும்ப சண்டைக்குப் பிறகு ஒரு முடிவை எடுத்துள்ளார். அதில், அவரது மரணத்திற்குப் பிறகு தனது மனைவி சம்பா பாய் மற்றும் நாய் ஜாக்கி ஆகியோருக்கு தனது சொத்தின் சட்டப்பூர்வ வாரிசாக மாற்றியுள்ளார். அவர் தனது சொத்தில் எதையும் தனது … Read more

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்.. ஒருவர் கைது!

யூசுப் வீடு அருகே தெரு நாய் ஒன்று அடிக்கடி குரைத்து கொண்டு பெரும் சத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், எரிச்சல் அடைந்த யூசுப் அந்த நாயை அந்த பகுதியில் இருந்து துரத்த முயற்சி செய்தும், அந்த நாய் அந்த பகுதியில் இருந்து செல்லவில்லை. இதையடுத்து யூசுப் வேறு இடத்திற்கு கொண்டு விட முடிவு செய்தார். இந்நிலையில், அந்த நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி, பின்னர் அந்த கயிற்றை காரின் பின் பகுதியில் கட்டிக்கொண்டு காரை வேகமாக ஓட்டிச்சென்றார். யூசுப்பின் இந்த … Read more

கொரோனாவுக்கும் பயம், பேரக்குழந்தை மீதும் பாசம் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

கொரோனாவால் தங்கள் பேரக்குழந்தைகளை கண்ணாடி வழியாக பார்க்கும் தாத்தா-பட்டி மற்றும் அவர்களின் நாய் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்று தங்களுக்கு வந்தவர்களிடம் கூட இல்லாத அச்சம் வராதவர்களிடம் முன்னெச்சரிக்கையாகவே இருக்கிறது. அதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் முன்னணி நாடக விளங்க கூடிய அமெரிக்காவில் இது குறித்த விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளை கவனித்து கொள்வதில் மிக அக்கறை காட்டுகின்றனர். அது போல தற்பொழுது அமெரிக்காவில் உள்ள ஒரு … Read more

பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு!

பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயல்.  தஞ்சையில் உள்ள தென்றல் எனும் இடத்தில தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தியின் இரு மகள்களுக்கும் அண்மையில் திருமணம் முடிந்து விட்டது. இருவரில்  மற்றொருவர் சென்னையிலுமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் டாபர்மேன் வகை நாய் ஒன்றை பிள்ளை போல செல்லமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், கர்ப்பிணியாக இருக்க கூடிய இந்த நாய்க்கு அபிராமி என … Read more

நாய்களுக்கு தேர்தலா? அமெரிக்காவில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்!

அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக, நாய் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மக்கள் முடிவுகளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக, நாய் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. வில்பர் பேஸ்ட் என்ற, பிரெஞ்சு புல்டாக் வகையை சேர்ந்த நாய் மொத்தமாக பதிவான வாக்குகளில் சுமார் 22,85 வாக்குகளில், 13,143 வாக்குகளை பெற்று, மேயராக … Read more

உப்புமூட்டை விளையாட்டை விளையாடும் நாய்குட்டி மற்றும் கோழி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உப்புமூட்டை விளையாட்டை விளையாடும் நாய்குட்டி மற்றும் கோழி. நாம் நமது சிறு வயதில் பல வகையான விளையாட்டுகளை விளையாடி இருப்போம். அந்த வகையில் உப்பு மூட்டை சுமக்கும் விளையாட்டானது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடப்படும் விளையாட்டுக்களில் ஒன்று. குழந்தைகள் அழும் பட்சத்தில், அவர்களது அழுகையை மாற்றுவதற்காக, பெற்றோர் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு இந்த விளையாட்டை விளையாடுவதுண்டு. இதனால், குழந்தைகளின் அழுகை மாறுவதோடு, மகிழ்ச்சியும் அடைவதுண்டு. ட்வீட்டரில் வெளியான இந்த வீடியோ, தற்போது இணையத்தில் … Read more

#ViralVideo: மாஸ்க் அணிந்து மாஸ் வாக்..!

அயர்லாந்து நாட்டில் முககவசம் அணிந்த செல்லப்பிராணி வாக்கிங் சென்று அசத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முக கவசம் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க தொடர்ந்து அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் சிலர் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியில் மெத்த போக்கையே பின்பற்றி வருகின்றனர். ஆனால், அயர்லாந்து நாட்டில் முககவசம் அணிந்த அழகுற வாக்கிங் சென்று வீடியோ … Read more

கோவிலுக்குள் நாயை வாக்கிங் அழைத்து சென்ற நபர் மீது வழக்கு பதிவு..!

#Dshorts: புவனேஸ்வரில் உள்ள ஸ்ரீ பக்ரேஸ்வர் மகாதேவின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகே ஒருவர் தனது நாயை வாக்கிங் அழைத்து சென்ற புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தின் அடிப்படையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக  போலீசார் தெரிவித்தனர்.