பிரதமர் மோடியுடன், இணையமைச்சர் எல் முருகன் சந்திப்பு!

ராஜ்யசபா உறுப்பினராக எல் முருகன் தேர்வான நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வானதை அடுத்து, சென்ற 1ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து … Read more

கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!!

டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கைகள் என தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்தவகையில் டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 8 கொரோனா … Read more