மார்ச் 15ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

மார்ச் 15 -ஆம் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். டீசல் விலை உயர்வு, டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மார்ச் 15 -ஆம் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மேலும், வரும் 26-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.