பாராகிளைடிங் செய்யும் போது 50 அடி உயரத்திலிருந்து விழுந்த கொரிய நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு

குஜராத்தின் மெஹ்சானாவில் 50 வயது தென் கொரிய நபர் ஒருவர் பாராகிளைடிங் செய்யும் போது விபத்துக்குள்ளாகும் காட்சி வீடியோவில் வெளியாகியுள்ளது. ஷின் பியோங் மூனின் பயன்படுத்திய  பாராகிளைடர்  சரியாக திறக்கப்படாமல் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் இந்த விபத்து நடந்ததாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார். மூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,எனினும்  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளரும், எழுத்தாளருமாகிய ஜான் பால் மரணம் …!

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாகிய ஜான் பால் அவர்களுக்கு 72 வயதாகிறது. இவர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான் பாலின் நண்பர் இவரது சிகிச்சைக்காக உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு இருந்துள்ளார். மேலும், இவரது சிகிச்சைக்காக கேரளா அரசு … Read more

சத்தீஸ்கர் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணம் ….!

சத்தீஸ்கர் மாநிலத்தின் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நத்தகொன் மாவட்டம் ஹரங்கார் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தவர் தான் தேவ்ரத் சிங். 52 வயதுடைய இவர் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தேவ்ரத் சிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#Breaking:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் கொரோனாவால் பலி…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கொரோனாவால் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன்(வயது 81) கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மைதிலி சிவராமன் அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்,உறுப்பினர்கள் மற்றும் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் … Read more

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனாவால் உயிரிழப்பு..!

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார். சமூக ஆர்வலரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரருமான ஷாஹீத் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் சந்து,சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அபய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் வெள்ளிக்கிழமை (மே … Read more

நடிகர் அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார்.!

பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார். இவர் பிகில், மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது  மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவுக்குத் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Eswatini (ஸ்வாஸிலாந்து) நாட்டின் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு.!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட Eswatini (ஸ்வாஸிலாந்து) நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினி காலமானார்.  நான்கு வாரங்களுக்கு முன்பு பரிசோதனை செய்ததில் ஈஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினிக்கு (52 வயது) கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இன்று பிற்பகல் காலமானார் என்று துணைப் பிரதமர் தெம்பா மசுகு ஒரு அறிக்கையில் … Read more

வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழப்பு!

வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் ஆதனூரிலுள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரும் அவரது மனைவி சுகந்தி என்பவரும் ஆயுத பூஜைக்காக வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஆதனூரில் இருந்து திட்டக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு கிளம்பும் பொழுது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சுகந்தியின் புடவை அவரை அறியாமல் சக்கரத்தில் சிக்கி உள்ளது. இதனால் … Read more

அதிபர் டொனால்டு ட்ரம்ப் சகோதரர் காலமானார்.!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலமானார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்  சகோதரர் ராபர்ட் டிரம்ப் . இவர் ஒரு தொழிலதிபர், இவர் உடல்நிலை குறைவுகாரணமாக  கடந்த மாதம் நியூயார்க்கில்  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று  இரவு இறந்தார் என்று வெள்ளைமாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் டிரம்ப் வயது 71. இவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று முன்தினம் தனது … Read more

முன்னாள் மத்திய மந்திரி ராஜசேகரன் மரணம்.!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி எம்.வி. ராஜசேகரன் அவர் உடல்நல குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இவருக்கு அவருக்கு கிரிஜா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ராஜசேகரன் கடந்த 1928-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி பிறந்த எம்.வி. ராஜசேகரன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். கனகபுரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த அவர் மத்திய அரசின் திட்ட … Read more