அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..! 35 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

Accident

எகிப்தின் பெஹெய்ரா கவர்னரேட்டில் அலெக்ஸாண்ட்ரியா பாலைவன சாலையில் பெஹெய்ராவுக்கு அருகில் பயணித்த காரில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த ரோட்டில் வந்த பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எறிந்துள்ளதுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எகிப்தில் அதிவேகமாகச் செல்வதாலும், சாலைகள் மோசமாக காணப்படுவதாலும், போக்குவரத்துச் … Read more

மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு – இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

Tamilnadu CM MK Stalin in Tanjore

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்துக்காக காத்திருந்த போது, பழமையான சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து விழுந்து, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கொழுமம் கிராமத்தில் வேலைக்கு செல்வதற்கு பேருந்துக்காக சமுதாய கூடத்தில் காத்திருந்த மணிகண்டன், கௌதம், முரளி ராஜன் ஆகிய மூவர் அருகே கனமழையால் சேதமடைந்து இருந்த பழமையான மேற்கூரை இடிந்து விழுந்து உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் … Read more

நாமக்கல் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து..! இருவர் உயிரிழப்பு..!

fire

நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் இந்த விபத்தின் போது வீட்டில் இருந்த பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தானது சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதின் காரணமாக  ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு – பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!

கால்பந்து விளையாட்டு வீரர் பிலேவின் மறைவைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு.  கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். … Read more

கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டது – ராகுல் காந்தி

கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டதுஎன ராகுல் காந்தி ட்விட்.  கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து  அவரது உடல் மோசமடைந்து வந்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு – முதல்வர் இரங்கல்..!

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு முதல்வர் இரங்கல்.  கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது, மறைவுக்கு தமிழக முதல்வர் … Read more

பாரதியாரின் பேத்தி மறைவு..! ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா மறைவுக்கு ஆளுநர் இரங்கல்.  மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94). இவர் பாரதியாரை போன்று தமிழில் மிகவும் புலமை பெற்றவர். பல நூல்களை எழுதிய இவர் இன்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ‘மகாகவி பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் , ஒரு சிறந்த பாடகி மற்றும் அர்ப்பணிப்புள்ள இசை ஆசிரியரை இழந்து … Read more

மகாகவி பாரதியாரின் பேத்தி காலமானார்..!

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94) வயது முதிர்வு காரணமாக காலமானார்.  மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94). இவர் பாரதியாரை போன்று தமிழில் மிகவும் புலமை பெற்றவர். மேலும் கவிதை எழுதுவதிலும் மிகவும் சிறந்தவர் ஆவார். மேலும், பல நூல்களை எழுதிய இவர் இன்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரிஸில் துப்பாக்கிசூடு – 3 பேர் உயிரிழப்பு..!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், குர்தீஸ் கலாச்சார மையத்தை குறிவைத்து நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 69 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை … Read more

வெண்ணிலா கபடிக்குழு பட நடிகர் காலமானார்..!

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த மாயி சுந்தர் காலமானார்.  பிரபல தமிழ் நடிகர் மாயி சுந்தர் அவர்கள் இன்று அதிகாலை காலமானார். தமிழ் நடிகரான மாயி சுந்தர், சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் விக்ரமின் ஸ்கெட்ச் படம், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.