‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

tn health

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மிக்ஜாம் … Read more

Rain Alert: புயல் எதிரொலி…7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

RainUpdate

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் புயல் உருவாகி உள்ளதால் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் நேற்று … Read more

உருவாகிறது அடுத்த புயல்! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

BiporjoyCyclone

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகியுள்ள நிலையில், வங்கக்கடலில் புதிய புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,  … Read more

#BREAKING: மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானது..!

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவத் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரம் நோக்கி செல்லும், ஜாவத் புயல் நாளை ஆந்திர கடலோரத்தை அடையும்போது மணிக்கு 90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 5-ஆம் தேதி ஒடிசாவின் பூரி கடற்கரை அருகே ஜாவத் புயல் கரையை கடக்கும் என … Read more

யாஸ் புயல் : ராஞ்சியில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

யாஸ் புயல் எதிரொலியால் ஜார்கண்ட், ராஞ்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே நேற்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில், நேற்று மாலை யாஸ் புயல் தீவிர புயலாக வலுவிழந்தது. மேலும் இது  வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறக்கூடும் என்று தெரிவித்தது. புயல் கரையைக் கடக்கும்போது, ஒடிசா மற்றும் … Read more

யாஸ் புயல் : ஒடிசா, மேற்கு வங்கத்தில் சூறைக்காற்றுடன் கனமழை..!!

அதிதீவிர யாஸ் புயல் கரை கடக்க தொடங்கியது இதனால் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  யாஸ் புயல்  அதி தீவிர புயலாக மாறி ஒடிசா அருகே வங்கக்கடலில் இன்று கரையை கடக்க தொடங்கியது. தாம்ரா – பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது. கரையை கடக்கும் போது 155 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் யாஷ் புயல் ஒடிசா-மேற்குவங்கம் … Read more

யாஷ் புயல் : ஒடிசாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

யாஸ் புயல் காரணமாக இன்று மற்றும் நாளை ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய 4  மாவட்டங்களுக்கு அரசு ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே நாளை நண்பகல் கரையைக் … Read more

நாளை கரையை கடக்கும் “யாஷ் புயல்” – இந்திய வானிலை மையம் கணிப்பு..!

யாஷ் புயல் நாளை கரைய கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.  மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே நாளை நண்பகல்  கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவில் பரவலாக கன … Read more

யாஸ் புயல்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

யாஷ் புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. பின்னர், நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தற்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு ஒரிசா – மேற்கு வங்கத்துக்கும் இடையே … Read more

யாஸ் புயல் வரும் 26 ஆம் தேதி கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்.!!

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள  யாஸ் புயல் வரும் 26ல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.  மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாறும். யாஷ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல் நாளை வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அதன் பின்  வருகின்ற 26ஆம் தேதி ஒடிசா … Read more