அதிகரிக்கும் கொரோனா.. தெருக்களை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசித்து வரும் தெருக்களை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் … Read more

மதுரையில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு !

மதுரையில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அதே போல் மதுரையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையில், கடந்த 24 … Read more

மதுரையில் கொரோனா பாதிப்பு 7,000-ஐ தாண்டியது!

மதுரையில் கொரோனா பாதிப்பு 7,000-ஐ தாண்டியது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பில், தமிழகத்தில், சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதன் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதித்தவர்கள் … Read more

மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும்- தமிழக அரசு!

மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அந்த பொதுமுடக்கம், ஜூலை 12ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் மதுரையில் ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என … Read more

மதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்!

மதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த முழு பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன்காரணமாக, மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் வழக்கமான பொதுமுடக்கம் … Read more

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா.. விற்கப்படும் “மாஸ்க் புரோட்டா” ரூ.50 தான்!

மதுரையில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் சூழலில், மக்களிடையே முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அங்கு முகக்கவச வடிவிலான புரோட்டா விற்கப்படுகிறது. மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,057 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா அதிகளவில் பரவிவரும் சூழலில், மக்கள் முகக்கவசத்தை அணிவதை புறக்கணித்துள்ளனர். … Read more

மதுரையில் பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு சீல்.!

பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமுடக்க விதிகளை மீறி 43 கடைகளை உரிமையாளர்கள் திறந்துள்ளன. இதனையடுத்து திறக்கப்பட்ட 43 … Read more

பிச்சையெடுத்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய முதியவர்.. நெகிழ்ந்த மக்கள்!

கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக, தான் பிச்சை எடுத்த ரூ.10000 பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் வழங்கிய செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டி என்பவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மதுரை வந்தார். இவர் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு தன்னால் ஈன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதற்காக, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, பழச்சந்தை மற்றும் பூ மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களாக பிச்சை எடுத்து வந்தார். … Read more

இந்த மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகள் இயங்க தடை.!

இறைச்சி வாங்கும் போது பொதுமக்கள்  சமூக இடைவெளி பின்பற்றவில்லை என பல மாவட்டங்களில் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது  மதுரை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஏப்ரல் 19-ம் தேதி இறைச்சி, மீன் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் இறைச்சி வாங்க வருவர்கள் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். கொரோனா அதிகம்  பாதித்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் … Read more

சமூக விலகலை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு சீல் வைப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இதனால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.மேலும் தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2- வது மாநிலக்கமாக உள்ளது. தமிழகத்தில் சமூக விலகலை கடைபிடிக்க கோரி அரசு அறிவுறுத்தி வருகிறது.ஆனால் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதில் தவறி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மொத்த … Read more