திருச்சியில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு.!

திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழப்பு. திருச்சியில் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து,மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். … Read more