#BREAKING: விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடுகள் – முதல்வர் அறிவிப்பு.!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் நீண்ட கால திட்டமாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.