கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

பி.எட் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.30,000 மேல் வசூலிக்கக்கூடாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.30,000 கட்டணம் நிர்ணயம் செய்திருந்தது என்றும் நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தது எனவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மீண்டும் கல்வித்துறை கட்டணம் குறித்து ஆலோசனையில் … Read more