ராகிங் விவகாரத்தில் கைதான 7 மாணவர்கள் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட்.!

PSG College

கோவை அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி, திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவரை அவரது கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். மாணவனை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கி, மொட்டை அடித்து அரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். அதனை வீடியோ எடுத்து வைத்து, மாடு அருந்துவதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.  இதைத்தொடர்ந்து அநத மாணவர், தன்னை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக … Read more

ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan

நூல் விலை ஏற்றம், மின் கட்ட டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளூர் வர்த்தகமும், வெளிநாடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின்கட்டண உயர்வால் கொங்கு மண்டல பகுதியிலுள்ள சிறு, குறு, நடுத்தர … Read more

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது.!

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது. கோவையில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். கார் வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரை … Read more

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது – தமிழக அரசு

விவசாயிகள் தாமாக முன்வந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமாக இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு. கோவை மாவட்டம் அன்னுரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் (1,630 ஏக்கர்) மட்டும் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. மேலும், கோவை மாவட்டம் அன்னுரில் அமையவுள்ள தொழிற்பூங்காவில் காற்று மற்றும் … Read more

தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை… கோவையில் மென்பொறியாளர் உயிரிழப்பு.!

ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது. கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டம் … Read more

கோவை கார் வெடி விபத்து – மீண்டும் நாளை விசாரணை!

கோவை கார் வெடி விபத்து வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணை. கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. கோவை கார் வெடி விபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு … Read more

நாளை பாபர் மசூதி இடிப்பு நாள் – தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம். நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், டிசம்பர் 6-ஆம் தேதி நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என … Read more

கோவையில் அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம். கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை … Read more

திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டமும் வரவில்லை – எஸ்பி வேலுமணி

கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்க வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி. கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டமும் வரவில்லை. நாங்கள் இருந்தபொது பணிகள் வேகமாக நடந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பணிகள் பொறுமையாக நடப்பதாகவும் குற்றசாட்டினார். கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் கோவையில் நடக்கும். குறைபாடுகளை … Read more

தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிரடி சோதனை! கோவையில் மட்டும் 20 இடங்கள்…

அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை. தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, கோவையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் … Read more