#BREAKING: இலங்கையை சேர்ந்த 2 மீனவர்களிடம் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே இலங்கையை சேர்ந்த 2 மீனவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது கடலோர காவல்படை. முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த சுதாகர் (26), ரோஷன் (30) ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருவரும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தார்களா? என்று விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடுக்கடலில் படகு பழுதானதால் அதிராம்பட்டினம் வந்து சேர்ந்ததாக மீனவர்கள் தெரிவித்தாகவும் தகவல் கூறப்படுகிறது.