#BREAKING: தொடர் நடவடிக்கை., ஒரே நேரத்தில் 6 பேரை கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக.!

அதிமுகவில் இருந்து மேலும் 6 பேரை நீக்கி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் உள்ளவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சிலர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். இதன்பின் அதிமுக அவர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது. இதுபோன்று கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுபவர்கள் மீது ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஒரே நேரத்தில் … Read more

திமுகவினர் பெண்களை கீழ்த்தரமாக பேசுகிறார்கள் – முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு

திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி,  திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பெண்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி பேசுவதாக கூறி, தேர்தல் பரப்புரைகளில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசும் திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்று பெண்களை தரக்குறைவாக பேசும் பேச்சாளர்களை எல்லாம் தட்டி கேட்க தைரியம் இல்லாத … Read more

#BREAKING: முதல்வர் பழனிசாமியிடம் மன்னிப்பு கோருகிறேன் – திமுக எம்.பி.ஆ.ராசா

முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மன்னிப்பு கோருகிறேன் என திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, முதல்வர் பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதிமுக தரப்பிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை … Read more

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி – பெண் உட்பட 6 பேர் கைது

முதல்வர் நெல்லை செல்லும் வழியில் மனித உரிமை காக்கும் கட்சி சார்பாக கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்த 6 பேர் கைது. நெல்லை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை முடித்த பிறகு நாங்குநேரி பிரச்சாரத்திக்கு சென்றபோது அங்குள்ள சுங்கச்சாவடி அருகே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட முயன்ற பெண் ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். சீர் மரப்பினரருக்கு இடஒதுக்கீடு … Read more

இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பேச்சை கேட்டால், வாய் கொள்ளாத சிரிப்பு – ப.சிதம்பரம்

இவற்றைப் படித்தால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இவற்றைப் படித்தால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது என்று கூறி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார், மோடி எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் வேளாண் சட்டங்களையும் எப்படி ஆதரிப்பது என்று கற்றுத் தந்தாரா? ஓபிஎஸ் சொன்னார், … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் பாஜக கூட்டணியை விட்டு வெளியேருவோம் என்று அறிவிப்பார்களா? -ப.சிதம்பரம் கேள்வி

அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ப.சிதம்பரம் வேண்டுகோள். ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா வெளிநடப்பு செய்திருந்தது. 13வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் மாகாண கவின்சில்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தியிருந்தது. இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் … Read more

#BREAKING: ஏப்.2ல் பிரதமர், முதல்வர், துணை முதல்வர் ஒரே மேடையில் பரப்புரை.!

ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு. ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்கின்றனர். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, … Read more

முதல்வர் அவதூறு வழக்கு – சீமான் மனு தள்ளுபடி

முதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ல் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யகோரிய மனுவை கடந்த ஆண்டே சீமான் வாபஸ் பெற்றதால் தற்போது வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் என்பது … Read more

ஒரேயடியாக அதிமுகவில் இருந்து மூன்று பேர் நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

கட்சிக்கு முரணான வகையில் செயல்பட்டதால் மூன்று பேரை அதிமுகவில் இருந்து நீக்கி முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தொகுதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும், மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த ச.கிரம்மர் சுரேஷ், … Read more

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?., வெளியானது ஜனநாயக கூட்டமைப்பின் கருத்து கணிப்பு.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பிரபல ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தங்களது தேர்தல் கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், அதிமுக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 122 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் … Read more