குழந்தை திருமணம்: 46 வயது மணமகன், 14 வயது மணமகளின் பெற்றோர் கைது..

பெங்களூரு யெலஹங்காவில் குழந்தை திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயது ஆண் மற்றும் 14 வயது சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளதாக கர்நாடக போலீசார் இன்று தெரிவித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி, குழந்தைகள் நலக் குழுவின் காவலுக்கு அனுப்பப்பட்டு, தற்போது பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள பெண்களுக்கான அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை ‘திருமணம்’ செய்தவர் சிக்கபெத்தஹள்ளியைச் சேர்ந்த நில உரிமையாளர் என்.குருபிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் தினக்கூலி … Read more

அதிர்ச்சி..இந்தியாவில் குழந்தை திருமண வழக்குகள் சுமார் 50% உயர்வு – NCRB தகவல்..!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரவுகளின்படி,கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தை திருமண வழக்குகள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவில் குழந்தை திருமண வழக்குகள் கடந்த 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் சுமார் 50 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தரவுகளின்படி நிபுணர்கள் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,என்சிஆர்பி தரவுகளின்படி, குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் மொத்தம் 785 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பதிவு … Read more

குழந்தை திருமணம் செய்தால் வழக்குப் பதிவு – அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை…!

குழந்தை திருமணம் செய்தால் குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நேற்று ஆறு மாவட்டங்களை (தென் மண்டலம்) சேர்ந்த சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், சமூக நல இயக்குநர் டி.ரத்னா, ஒருங்கிணைந்த … Read more

சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை- கமல் ..!

சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க தமிழக அரசு  உடனடி கவனம் செலுத்த வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. 40% வரை குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களுக்கு பலர் கண்டனம் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து வருகிறனர். இந்நிலையில், மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன் … Read more

இந்த மாநிலங்களில் 18 வயதிற்குள் 40% பெண்களுக்கு திருமணம் நடந்துள்ளது.. கணக்கெடுப்பில் தகவல்..!

பீகார், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அங்கு 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஆந்திரா (12.6 சதவீதம்), அசாம் (11.7 சதவீதம்), பீகார் (11 சதவீதம்), திரிபுரா (21.9 சதவீதம்), மேற்கு வங்கம் (16.4 சதவீதம்)  ஆகிய … Read more