சத்தீஷ்கரில் ஆட்டோ மீது மோதிய எஸ்யூவி கார்: 9 பேர் பலி..!

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று பிற்பகல் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கோண்டாகான் தெஹ்சில் அமைந்துள்ள போர்கான் என்ற கிராமத்தில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 30 இல் ஒரு ஆட்டோ ரிக்சா மீது ஒரு எஸ்யூவி மோதியுள்ளது. இந்த ஆட்டோ … Read more

காட்டு யானையுடன் செல்பீ எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை…!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் யானையுடன் செல்பீ எடுக்க முயற்சித்த பொழுது, யானை மிதித்ததால் உயிரிழந்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள மகாசாமந்த் எனும் பகுதியை சேர்ந்த அரசு சுகாதார ஊழியர் அஜய் திவாரி என்பவர் நேற்று முன்தினம் பணி முடிந்து காட்டு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் ஒரு யானை கூட்டம் சாலையை கடந்து செல்வதை கண்டு ஆர்வத்துடன் அந்த யானை கூட்டத்தை பின்தொடர்ந்து செல்பீ எடுக்க முயற்சி செய்துள்ளார். இவரைப் … Read more

பிராமணர்கள் குறித்து அவதூறாக பேசிய சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கைது…!

பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த குமார் பாகேல் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் அவர்கள்  உள்ளார். இந்நிலையில் பூபேஷ் பாகேலின் தந்தை நந்தகுமார் பாகேல் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு அண்மையில் சென்று இருந்தார். அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களுக்கும் நான் கூறுவது, உங்கள் கிராமத்துக்குள் பிராமணர்களை மட்டும் அனுமதிக்காதீர்கள். மற்ற அனைத்து … Read more

திருமணத்திற்கு பின் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது வன்கொடுமை ஆகாது – சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்!

திருமணத்திற்கு பின் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது வன்கொடுமை ஆகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது கணவர் மீது பாலியல் வன்கொடுமை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் திருமணமான மனைவியை அவருக்கு விருப்பம் இல்லாமல், வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுத்துவது திருமண பாலியல் வன்கொடுமை ஆகாது எனக் கூறியுள்ளனர். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இந்திய சட்டப்பிரிவு 377 இன் … Read more

சத்தீஸ்கரில் ஆகஸ்ட் 8 முதல் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் அறிக்கை கட்டாயம்..!

சத்தீஸ்கரில் ஆகஸ்ட் 8 முதல் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் அறிக்கை கட்டாயம் என சட்டீஸ்கர் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது, ஆகஸ்ட் 8 முதல் மாநிலத்திற்கு வருகை தரும் விமானப் பயணிகள் எதிர்மறை ஆர்டி-பிசிஆர் அறிக்கையை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். சத்தீஸ்கர் திங்களன்று புதியதாக 236 பேருக்கு கொரோனா தொற்றும்  மூன்று இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு ஷாட்டுகளையும் எடுத்த பயணிகள் 96 மணி நேரத்திற்குள்  எடுத்த கோவிட் -19 எதிர்மறையான  பரிசோதனையின் அறிக்கையை அளிக்க … Read more

சத்தீஸ்கர் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சல் சுட்டுக்கொலை..! ஆயுதங்கள் பறிமுதல்..!

சத்தீஸ்கரில் சிறப்பு காவல் படைகளுக்கும், நக்சலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் நக்சல் சுட்டுக்கொலை. சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் இருப்பது குறித்து ரகசிய தகவல் வெளிவந்துள்ளது. அதனால், பஸ்தர் டி.ஆர்.ஜி. சிறப்பு காவல்துறை படைக்கும், நக்சல்களுக்கும் இடையே  நேற்று காலை 8 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. துப்பாக்கி சண்டை முடிந்த பின்னர், அந்த இடத்தில் பெண் நக்சல் ஒருவர் சீருடையோடு இறந்து கிடந்துள்ளார். மேலும், அந்த இடத்தில் ஏ.கே. 47 … Read more

தாய் மற்றும் 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண் குழந்தைகள் மற்றும் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விரக்தி தான் தற்கொலைக்கு காரணம் என தகவல். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பெண்ணொருவர் தனது ஐந்து பெண் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு சென்று மகாசமுந்த் மற்றும் பெல்சோண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ரயில் வரும் நள்ளிரவு நேரத்தில் ரயில் முன் விழுந்து தற்கொலை … Read more

திருமணம் செய்து கொள்வதாக கூறி செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்!

சத்தீஸ்கரை சேர்ந்த செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த மும்பை மருத்துவர். மும்பை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மும்பையில் அந்த செவிலியர் பணியாற்றிய மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது … Read more

டன்டேவாடாவில் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட் என்கவுண்டர்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் டன்டேவாடா மாவட்டத்தில் பெண் நக்சலைட் ஒருவரை அங்குள்ள பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் பல்லவா கூறுகையில், கெய்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமல்நார் கிராமத்தின் அருகில் காலை 6.30 மணியளவில் நக்சல்களுடன் மாவட்ட ரிசர்வ் காவல்துறையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த துப்பாக்கி சண்டையில் குண்டுகளை மாற்றும் அந்த குறுகிய நேரத்தில் நக்சலைட்டுக்கள் தப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ஒரு … Read more

தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் இல்லை….!

சத்தீஸ்கரில் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் தனது ஊழியர்களிடம் தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ளதால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த மாநிலங்களில் தளர்வுகளுடன் மற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.பின்னர்,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது … Read more