அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

supreme court

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதாவது, முடித்துவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு எதிராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தலைமை நீதிபதி … Read more

பப்ஜி மதன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. இதுகுறித்து சென்னை  சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பப்ஜி மதனை போலீசார் தேடி வந்த நிலையில், போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். பின் பப்ஜி மதன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை … Read more

#BREAKING: நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. அனைத்து மனுக்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் … Read more

#BREAKING : பால்காரர் வரி கட்டும் போது நடிகர் வரி கட்ட கூடாதா….? தனுஷை விமர்சித்த நீதிபதி…!

நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள். நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது. நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில், இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று … Read more

அங்கன்வாடிகளை திறக்க ஆலோசிக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை…!

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆலோசனைகளை மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக பள்ளிகளில் இயங்கிய காலகட்டங்களில் ஏழை, எளிய மாணவர்கள் உணவை குறித்து கவலைப்படுவதில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் தங்களது வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வதற்காக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் சத்துணவு அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், … Read more

#BREAKING : தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு…! துரைமுருகன் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு…! – உயர்நீதிமன்றம்

தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க சேனை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தற்போதைய அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அதிமுக சார்பில் பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயக்குமார் என்பவரின் வெற்றியை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் அமர்வில் … Read more

நீட் தேர்வு குழு:பாஜக வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மாணவி மனுதாக்கல்..!!

நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மாணவி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த வகையில்,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றார். இதனையடுத்து, நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் … Read more

நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் தாஜ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் – உயர்நீதிமன்றம் அதிரடி

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரயில்வே நடைபாதைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரயில்வே நடைபாதை கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு … Read more

#BREAKING : நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது. தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவதையடுத்து, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை ஜூன் 10-ம் தேதி அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து, இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி கரு.நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு … Read more

ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்குக்கு தடை..!

ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் … Read more