மத்திய அரசுடன் ஒத்துழைக்கிறோம்.! மாநில நலனில் சமரசம் கிடையாது – கேரள முதல்வர் உறுதி.!

முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு, மத்திய அரசுடன் ஒத்துழைக்கிறோம், அதற்காக மாநில நலன்களில் சமரசம் கிடையாது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மத்திய அரசுடன் முழு மனதுடன் ஒத்துழைப்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான அதிகார சமநிலையற்ற தன்மை பல சவால்களை உண்டாக்குகிறது. இதனால் அரசமைப்பு மூலம் மத்திய அரசுடனான அதிகார சமநிலையில் உள்ள சவால்களை தீர்க்க முயற்சிக்கிறோம் என கூறியுள்ளார்.  மத்திய அரசுடன் முரண்படுவது தங்கள் வழி அல்ல என்றும்  ஒக்கி புயல், பெரும்வெள்ளம், … Read more

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ஓட்டுரிமை கட் – மத்திய அமைச்சர் கருத்து!

ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களின் பெற்றோர் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று மத்திய கால்நடை துறை அமைச்சர் ஆச்சார்யா கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.  இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.   பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஆச்சார்யா கிரிராஜ் சிங். மத்திய அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஓன்று தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் 1947 க்கும் 2019 … Read more

குழந்தைகள் உயிர்வாழ மோசமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று ! நிடி ஆயோக் அறிக்கை !

உலகில் குழந்தைகள் வாழ மோசமான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாக இருப்பதாக நிடி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மதம் மட்டும் பீகாரில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் நாட்டின் சுகாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் குழந்தைகள் மரண விகிதம் 2000 ம் ஆண்டை ஒப்பிடும் போது தற்போது ஏறத்தாழ பாதியாக குறைந்துள்ளது. இதற்கு குழந்தைகளுக்கு நோய் பரவாமல் இருக்க அரசின் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முக்கிய காரணங்களாகும். ஆனால் … Read more

ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது…அருண் ஜெட்லி விளக்கம்…!!

அருண்ஜெட்லி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு எந்த வரியையும் உயர்த்தாமல் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக மறைமுக வரி , ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் 1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று தெரிவித்த அருண் ஜெட்லி. இதனால் ஆண்டுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு … Read more

விவசாயிகளுக்காக 4,000,00,00,000 செலவு செய்யும் மத்திய அரசு..!!

மத்திய மோடி அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து பயன்  பெரும் வகையில் 22 விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை  உயர்த்தப்படும் என்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழகியுள்ளது. இதில் விவசாய விளைபொருள்களான நெல், கோதுமை, சிறு தானியங்கள் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு  உயர்த்தப்பட்ட குறைந்த பட்ச ஆதாரவிலை அனைவருக்கும் கிடைக்கும். இந்த புதிய திட்டத்தினால் மத்திய அரசுக்கு, கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. … Read more

வரலாற்றில் இன்று! லாலு பிரசாத் யாதவ்..

லாலு பிரசாத் யாதவ்: லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.இவர் 1947ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பிறந்தார். இவர் பீகாரின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். இவர் மீது எதிர்கட்சிகள் பல்வேறு குற்றங்களை சுமத்தினாலும் பீகார் மக்கள் இவரை ஹீரோவாக தான் பார்க்கிறார்கள் சுகுமாரன்: … Read more