உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை! போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு …

பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும், அதே நேரத்தில் ஊழியர்கள் மீது நீதிமன்ற உத்தரவில்லாமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு … Read more

தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் சஸ்பெண்ட்!1200 பேர் கைது …….

ஆறாவது நாளாக தமிழகத்தில் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் போரரட்டம் செய்தனர்.தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 1200 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். source: dinasuvadu.com

நாளை விசாரணைக்கு வருகிறது போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்களின் முறையீட்டு வழக்கு!

தமிழகத்தில் இன்றுடன் ஆறாவது நாளாக போக்குவரத்து ஊழியர்களின்   போராட்டத்தை தொடர்ந்து இதன் வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் . போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த காரணம்பற்றி நீதிபதி மணிகுமாரிடம் முறையிட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை அரசு தராததால் பிரச்சனை நீடித்து வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உத்தரவின்படி நீதிபதிகள் மணிகுமார், கோவிந்தராஜ் அமர்வு … Read more

டிக்கெட் பரிசோதகர்கள் போராட்டம் : 'நடத்துநராக பணிபுரிய கட்டாயபடுத்துகின்றனர்'

தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை அரசு பேருந்து இயக்க போக்குவரத்து துறை சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் டிக்கெட் பரிசோதகர்களை பேருந்தில் நடதுநர்களாக வேலைசெய்ய கூறிவருகின்றனர். இதனால் கோபமடைந்த கடலூர் மாவட்ட டிக்கெட் பரிசோதகர்கள் தங்களை கட்டாயபடுத்தி நடத்துநராக வேலைசெய்ய சொல்கிறார்கள் எனவும், பணி … Read more

கோவையில் பைக் ரேசில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல்!

பைக் ரேசில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – கோவை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். கோவை சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். அவிநாசி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கோவை நகருக்குள் வாகனங்கள் நுழையும் முக்கியமான 7 சாலைகளில் கண்காணிப்புக் … Read more

திருப்பரங்குன்றம் அருகே தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து!

மதுரை அருகே ஓட்டுனர் பற்றாகுறையால் லாரி ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மதுரை அருகே உள்ள  திருப்பரங்குன்றம் பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கியவர் லாரி ஓட்டுநராக இருந்த டேனியல் ஆவார். ஒட்டுநர் பற்றாக்குறையால் டேனியல் விளச்சேரி செல்லும் அரசுப் பேருந்தை இயக்கி திருநகர் 7 வது ஸ்டாப் அருகே சென்ற போது மின்கம்பம் மோதி விபத்துக்குள்ளானது.அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பீதியடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.இதனால் விபத்து … Read more

நிலுவை தொகை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு : வழக்கு பிற்பகல் ஒத்திவைப்பு

அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று 5 வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில், இந்த போக்குவரத்து வேலைநிறுத்த போராட்டத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான். எனவும், தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளிமாணவர்களும் தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்களின் போராட்டம் என்னையும், சொகுசு கார்களில் வரும் அமைச்சர்களையோ பாதிக்க வில்லை. பொதுமக்களை மட்டும் தான் … Read more

திமுகவின் ஒருதலைபட்சமான அறிக்கை வருத்தமளிக்கிறது!

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக செயல்தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், நேற்று (6.1.2018) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, அவரிடம் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தெரிவித்து, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதியம் குறித்த கோரிக்கைகளை … Read more

தமிழகம் முழுவதும் 4வது நாளை எட்டிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்!

தமிழக அரசு அறிவித்த 2.44  சதவீத சம்பள உயர்வை ஏற்க மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், 2.57 சதவீத ஊதிய உயர்வை கோரியுள்ளனர். மேலும், நிலுவைத் தொகை 7,000 கோடி ரூபாயை வழங்கக்கோரி, கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், அரசு உடனடியாக போராட்டத்தை … Read more

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி முதல்வருடன் ஸ்டாலின் பேச்சு!

போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஸ்டாலின் அவர்கள் அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பேச்சுவாரத்தை மூலம் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். source: dinasuvadu.com