தமிழ்நாட்டில் பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்களை அதிக விலையில் விற்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சாதாரண புத்தகங்களை விட 30 சதவீதம் அதிக விலையில் விற்கப்படுகிறது. இதனால் நடுத்தறவர்கத்தில் உள்ள மாணவர்கள் இதை வாங்க சிரமப்படுவதாக கூறுகின்றனர். மேலும் பிரெய்ல் புத்தகங்களில் ஆச்சு அடிக்கும் ஒரு பக்கம் சாதாரண புத்தகங்களின் மூன்று பக்கத்திற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதை பற்றி பேசிய எம்.ஆர்.எல் ஆர்பர்கல் நேச கரங்களின் நிறுவனர் வி.சங்கர்லால், “பிரெயில் புத்தகங்களை அல்லது பார்வை குறைபாடுள்ள மாணவர்களின் மற்ற கல்வித் தேவைகளுக்காக உதவியை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ஜனவரி, 4, 1809, லூயி பிரெய்லி பிறந்த தினம்: பார்வையற்றோருக்கு கல்விக் கண் திறந்த லூயி பிரெய்லி பிறந்த தினம் இன்று. 1809 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த இவர், சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக தன் கண்பார்வையை இழந்தார். பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக ஒரு முறையை உருவாக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை பிரெய்லிக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நைட் ரைட்டிங் என்னும் முறை பிரெய்லிக்கு உதவிகரமாக அமைந்தது. இம்முறையைப் பயன்படுத்தி 1829 ஆம் ஆண்டு […]
தலைநகர் டெல்லியின் ஜனக்புரி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பார்வையற்ற மாணவர்களுக்காக இலவச இல்லம் ஒன்று இயங்கி வந்தது. அந்த இல்லத்தை, டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் சமீபத்தில் இடித்தனர். இதன் காரணமாக, அந்த இல்லத்தில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசம், பீகார், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பார்வையற்ற மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது அவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற பொதுவெளியில் தங்கியுள்ளனர். இதன் காரணமாக […]