வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு… மத்திய அரசு ஒப்புதல்!

bank employees

Salary Hike : வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. … Read more

நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் …!

நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி … Read more

வங்கி ஊழியர்களுக்கு குட்நியூஸ்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு…!

ரிசர்வ் வங்கி (RBI) வங்கியானது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.அதன்படி,முக்கிய பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வங்கிகள் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 நாட்கள் முன்அறிவிப்பு இல்லாத கட்டாய விடுப்பு அதாவது ஆச்சரிய விடுப்பு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.அதன்படி,வங்கி ஊழியர்களுக்கு இந்த விடுமுறையைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புதிய விதியானது,அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும்,ஊழியர்கள் கட்டாய விடுப்பில் இருக்கும்போது, அவர்களின் பணி பொறுப்புகள் தொடர்பாக வங்கி செயல்பாடுகளுடன் எந்த … Read more

2-வது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் போராட்டம்…! தவிக்கும் பொதுமக்கள்…!

தொடர்ந்து 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காசோலை மற்றும் வங்கி பரிவர்த்தனை போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், பட்ஜெட் தாக்கலின் போது, 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என அறிவித்திருந்தார்.  இதற்கு, வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரித்த நிலையில், மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படாத … Read more

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

மத்திய அரசு இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கண்டித்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டாம்.  மத்திய அரசு இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய பட்ஜெட்டின் போது வெளியிட்டார். இதனையடுத்து, மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பைக் கண்டித்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் இன்றும் நாளையும் 2 நாள் … Read more

பாரத் பந்துக்கு ஆதரவு மட்டுமே அடைப்பு இல்லை – வங்கி ஊழியர்கள்!

இன்று நாடு முழுவதும் நடைபெறக்கூடிய பாரத் பந்த் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தந்தாலும், வங்கியின் ஊழியர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த இரு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரக்கூடிய இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் முழு அடைப்பு செய்து தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு விவசாய … Read more

போலி வங்கியை தொடங்கிய முன்னாள் வங்கி ஊழியரின் மகன் உட்பட 3 பேர் கைது.!

முன்னாள் வங்கி ஊழியர்களின் மகன் கடலூரில் போலி எஸ்பிஐ கிளையைத் திறந்ததால் மேலும் 2 பேருடன் கைது செய்யப்பட்டார் பன்ருட்டியில் எஸ்பிஐ கிளையாக இயங்கும் போலி வங்கியை  தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் தொடங்கியதால் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நகல் வங்கியை நடத்துவதற்கான திட்டம் முன்னாள் வங்கி ஊழியர்களின் மகனால் தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 19 வயதான கமல் பாபு, முன்னாள் வங்கி ஊழியர்களின் மகன் என்பது தெரியவந்துள்ளது. கமல் பாபுவின் தந்தை … Read more

இன்று வங்கி ஊழியர்கள் போராட்டம்..!

வங்கி இணைப்பை கண்டித்து இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வங்கி இணைப்பு என்ற பெயரில் மத்திய அரசு வருடத்திற்கு சுமார் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை நிறுத்துகிறது என வங்கி ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து அவர்கள் கூறியபடி இன்று ஒருநாள் … Read more