உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்கம் நிலை இல்லை – ராகுல் காந்தி

இந்தியாவில் ஊரடங்கு உண்மையில் தோல்வியடைத்துள்ளது. இங்கு மட்டும் தான் பாதிப்பு அதிகரிக்கும்போது தளர்வுகளும் அதிகரிக்கின்றன. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொருளாதார நிபுணர்களிடம் காணொலி மூலம் பேசி வருகிறார். அந்தவகையில், இந்த வாரம் பஜாஜ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜூவ் பஜாஜியுடன் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, ராகுல் காந்தி பேசுகையில், உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்க நிலை நிலை இல்லை என்றும் அப்போதுகூட சில விஷயங்களுக்கு … Read more

கடந்த மாதம் 37,878 வாகனங்களை ஏற்றுமதி செய்து இழப்புகளை ஓரளவு குறைத்த பஜாஜ் நிறுவனம்.!

கடந்த மாதம் பஜாஜ் இருசக்கர வாகன ஏற்றுமதியானது 32,009ஆக உள்ளது. பஜாஜ் ஆட்டோ பிரிவு ஏற்றுமதியானது இந்த வருடம் 5,869ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்இந்த எண்ணிக்கை 5 இல் ஒரு பகுதியே ஆகும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு பொதுமக்களை பெருமளவு பாதித்தது. மேலும் பல்வேறு தொழில்நிறுவனங்களும் பெருமளவு பாதிப்பை சந்தித்தன. அதில், ஆட்டோமொபைல் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது.  கடந்த மாதம் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன விற்பனையில் பெரும் இழப்பை … Read more