காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சாமியாடி…! சாமியாரை அடித்து உதைத்த பொதுமக்கள்..!

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சாமியாடியை, அடித்து உதைத்த பொதுமக்கள். திருச்சி, அல்லித்துறை அருகே சவேரியார்புரத்தை சேர்ந்த ஜூலியஸ் சாந்தகுமார், இரவில் சுடுகாட்டில் தங்கி நிர்வாணமாக மாந்திரீக பூஜைகளில் ஈடுபட்டு  வந்துள்ளார்.அடிக்கடி  ஜூலியஸ் சாந்தகுமாருடன், ஊர் மக்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சுண்ணாம்புக்காரன்பட்டியில் தனது இரு வாகனத்தை தீ வைத்து எரித்த ஜூலியஸ், வழியில் சென்றவர்களிடம் தகராறில்  ஈடுபட்டுள்ளார். பின் தன்னை தானே கத்தியால் கீறிக்கொண்டதை பார்த்த பொதுமக்கள், சோமரசன் பேட்டை போலீசாருக்கு தகவல் … Read more

சிறுத்தையிடம் சிக்கிய குழந்தை…! பேத்தியை மீட்க சிறுத்தையுடன் சண்டையிட்ட தாத்தா-பாட்டி…!

சிறுத்தையிடம் சிக்கிய பேத்தியை மீட்க சிறுத்தையுடன் சண்டையிட்ட தாத்தா-பாட்டி. மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் குனோ தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள துரா கிராமத்தில் தாத்தா, பாட்டி மற்றும் அவர்களது பேத்தி ஆகியோர் தங்களது வீட்டில் தரையில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த சிறுத்தை தரையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு சென்றுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி, சிறுத்தையின் தாடையில் குழந்தையின் வலது … Read more

காஷ்மீரில் துப்பாக்கி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..!

காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது துப்பாக்கி தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தற்போது அதிகரித்து வரும்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை கண்டால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது போன்ற தாக்குதலில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் வருகின்றனர்.  இந்த சமயத்தில் நேற்று காலை பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்துள்ளனர். அதனை பாதுகாப்பு … Read more

உணவு உட்கொள்ளவில்லை என 8 வயது சிறுவனை குச்சியால் தாக்கிய தந்தை…! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…!

குஜராத்தில் 8 வயது சிறுவன் உணவு உட்கொள்ளவில்லை என தந்தை அடித்ததில் பரிதாபமாக உயிரிழப்பு.  நேபாளத்தைச் சேர்ந்த குடும்பம், குஜராத்தின் கலாவாட் சாலையில் உள்ள ராணி கோபுரத்திற்கு அருகிலுள்ள நந்தன்வன் சொசைட்டியில் வசித்து வருகிறது. இந்நிலையில் சித்தராஜ் என்பவர், அவரது மகனான சவுரப்பை (8) மாலையில் உணவு உட்கொள்ள வருமாறு அழைத்துள்ளார். ஆனால், சிறுவன் சவுரப் உணவு உட்கொள்ள மறுத்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் தந்தை, சிறுவனை குச்சியால் கடுமையாக தாக்கியுள்ளார். வீட்டை விட்டு வெளியே ஓடிய சிறுவன் … Read more

வீட்டில் வளர்க்க பாம்பை ஆர்டர் செய்த நபர்…! விஷம் நீக்கப்படாத பாம்பு டெலிவரி ஆனதால் அதிர்ச்சி…!

வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். பாம்பை விற்ற நிறுவனம், விஷம் எடுக்கப்பட்ட பாம்பிற்கு பதிலாக, விஷம் எடுக்கப்படாத பாம்பை வழங்கியுள்ளது. சீனாவைப் பொறுத்தவரையில் பல விசித்திரமான விலங்குகள் மற்றும் பறவைகளை தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளப்பதுண்டு. சீனாவில் பாம்புகளை வீட்டில் வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசித்து வரும் ஒருவர் தனது வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இவ்வாறு ஆர்டர் செய்தவருக்கு பாம்பு வீட்டிற்கு வந்தது. பொதுவாக … Read more

மருந்து வாங்க சென்றவரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்…!

சத்தீஸ்கரில் மருந்து வாங்க சென்றவரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டிஸ்கர் மாநிலம் சித்தூரில், சாஹில் குப்தா என்பவர் மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது போலீசார் அவரது வாகனத்தை மடக்கி பிடித்துள்ளனர். வாகனத்தின் ஆவணங்களை காட்டுமாறு … Read more

ஜெருசலேமில் ஏற்பட்ட மோதல்களில் 50 பேர் கைது…! 20 போலீசார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!

ஜெருசலேமில் ஏற்பட்ட மோதல்களில் 50 பேர் கைது. 20 போலீசார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு ஒரு முக்கிய இடமாக இருப்பது ஜெருசலேம். இந்த பகுதியில் சமீப நாட்களாகவே பதட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதியில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கான புனித ஸ்தலங்கள் உள்ளது. இந்நிலையில் ஜெருசலேமில் ஒரு முக்கிய புனிதத் தலத்தில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை நடைபெற்றது. இதில் வன்முறை எழக்கூடும் என்பதால் முஸ்லிம் மதத் தலைவர்கள் கட்டுப்பாட்டுக்கு அழைப்பு விடுத்ததை … Read more

காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா….? முதியவரை தாக்கிய நடத்துனர்…!

பேருந்தில் பயணித்த முதியவரை தாக்கிய நடத்துனர்.  ஈரோடு அருகே சத்தியமங்கலத்திலிருந்து கவுந்தம்பாடி வழியாக ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணிகளுக்கு நடத்துனர் டிக்கெட் வழங்கி வந்த நிலையில், பேருந்தில் பயணித்த முதியவரிடம் நடத்துனர் டிக்கெட்டுக்கு சில்லறை கேட்டுள்ளார். இதில் நடத்துனர் மற்றும் முதியவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துனர் ஆத்திரத்தில் காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா? என்று தகாத வார்த்தைகளினால் முதியவரை திட்டியுள்ளார். இதனையடுத்து முதியவர் தான் … Read more

#Breaking : 10 மணிக்கு மேல் உணவகத்தில் உணவு உண்ட பொதுமக்கள் மீது போலிசார் தாக்குதல்…!

கோவையில் காந்திபுரத்தில், உணவகத்தில் கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், கடந்த 10- ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கோவையில் காந்திபுரத்தில், உணவகத்தில் அமர்ந்து சிலர் உணவருந்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், பெண் உட்பட பல காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, கடை … Read more

தஞ்சையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது தாக்குதல்….! போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்…!

தஞ்சையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்கள் மீது தாக்குதல். தஞ்சையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வாலிபர் ஒருவர் விபத்தில் காயமடைந்ததால், சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் இறுதியில் மோதலாக மாறியது. இதனையடுத்து, காயமடைந்தவரின் உறவினர்கள் நாற்காலியை கொண்டு பயிற்சி மருத்துவரை தாங்கியுள்ளனர்.  இதனால்,அங்கு உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு … Read more