ATM மூலம் பரவிய கொரோனா – 3 இந்திய ராணுவம் பாதிப்பு!

குஜராத்தில் ராணுவ வீரர்களுக்கு ஏடிஎம் மிஷினில் இருந்து கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்  கொரோனா வைரஸின் தாக்கம் தினம் தினம் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. ஆனால் குணமாகியவர்கள் பலரும் வீடு சென்று கொண்டுதான் உள்ளனர். இந்நிலையில், தற்பொழுது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவில் பாதுகாப்பு பணியில் இருந்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு மனிதர்கள் மூலமாக கொரோனா … Read more

பிற ஏடிஎம்களில் பணமெடுக்க கட்டணம் கிடையாது!-நிர்மலா சீதாராமன்

டெல்லியில் சற்றுநேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க மூன்று மாதங்ககளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு எனவும், வங்கி கணக்கை ஸிரோ பேலன்சில் வைத்துக்கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யுமாறு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் … Read more

ஜாக்கிரதை: கொடுங்கள் நான் எடுத்து தருகிறேன்.! முதியவரை ஏமாற்றி ரூ.1.13 லட்சம் திருட்டு.!

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ராஜேந்திரன் என்பவர், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்று தனது கனரா வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ராஜேந்திரனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், பணம் எடுத்துக் கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார். பணம் எடுத்த பின்னர் தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டு ராஜேந்திரனிடம் மாற்றிக் … Read more

ஏடிஎம்மில் ரூ.5,000 பணம்.! காவல்நிலையத்தில் ஒப்படைத்த அதிகாரி.!

வேலூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் கிடைத்த ரூ.5,000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆற்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சோமு என்பவர் அங்குள்ள ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது இயந்திரத்தில் ரூ.5,000 பணம் இருந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த அதிகாரி பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இனிமேல் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள் கிடைக்காது.! இந்தியன் வங்கி அதிரடி அறிவிப்பு.!

நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்களில் மார்ச் 1-ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் கிடைக்காது என இந்தியன் வங்கி அறிவிப்பு. இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாகவும், இதனையடுத்து ஏ.டி.எம்.களில் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதேபோல் ரூ.2000 நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் … Read more

பதறிய வங்கி நிர்வாகம்.! ஏடிஎம்மில் ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் .!

மடிக்கேரி பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம்மில்  ரூ.100-க்கு பதிலாக ரூ.500 வந்துள்ளது. பின்னர் ஏடிஎம்மில் பணம் எடுத்துச் சென்ற வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு வங்கி நிர்வாகம் பணத்தை திருப்பி வாங்கி உள்ளது. கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம்மில்  ரூ.100-க்கு பதிலாக ரூ.500 வந்துள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி அப்பகுதியில் உள்ள மக்கள் அவசர அவசரமாக பணத்தை எடுத்துச் … Read more

முக்கிய அறிவிப்பு .! இனி இந்த 12 மணி நேரத்தில் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செல்போன் அவசியம். !

இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல் நம்பர் அவசியம். அந்த நம்பருக்கு வரும் ஓடிபி வைத்து மட்டுமே இனி ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க முடியும். இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியாக  எஸ்.பி.ஐ. உள்ளது. இந்நிலையில் எஸ்.பி.ஐ. பேங்க் ஏ.டி.எம்.களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதாவது … Read more

ஏடிஎம்-மில் ரூ.200, பதிலாக ரூ.500 வந்ததால் மக்கள் குஷி..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது.அதில் ரூ .200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைத்தனர். இந்த செய்தி அப்பகுதியில்  காட்டு தீ போல பரவ அந்த ஏடிஎம் மையத்திற்கு மக்கள் குவித்தனர்.ஏடிஎம் இயந்திரத்தில் ரூ .200 பட்டனை அழுத்தி ரூ.500 எடுத்து சென்றனர்.இந்த செய்தியை அறிந்த வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஏடிஎம் மையத்தை பூட்டி வைத்தனர். பின்னர்அந்த  இயந்திரத்தை பார்க்கும் … Read more

2 மாணவர்கள் யூடியூப்பில் வீடியோ பார்த்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி..!

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்மில் 2 வாலிபர்கள் கதவை பூட்டிக்கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது சிக்னல் மூலமாக மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது. உடனே மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு மாணவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரத்தைச் … Read more

இனி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்..! எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு ..!

ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் தங்களது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஒரு புதிய வசதியை  நாடுமுழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. முன்பு நாம் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் சென்று வரிசையாக நின்று பணம் எடுத்து வரும் நிலைமை இருந்தது. இதனால் வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும், வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்கள் வராமல் எளிதாக பணம் எடுக்கவும் கொண்டுவரப்பட்டது தான் ஏ.டி.எம் கார்டுகள். தற்போது எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்னும்  … Read more