இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஐ.நா. பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் 5 நாள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியா குட்ரெஸை நேரில் பார்த்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சு வார்த்தையில் இருவரும், இந்தியாவின் கொரோனா தாக்கம் பற்றியும், ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றியும் பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை அதிகரிப்பதை குறித்தும், எல்லாநாடுகளுக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க … Read more

கொரோனா காரணமாக 100 கோடிக்கு அதிகமான மாணவர்கள் பாதிப்பு – ஐ நா

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்தார். குறைந்தது 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களது தொடக்க கல்வியை இழந்துள்ளனர் என்று கூறினார். இதனால் ஒரு தலைமுறையே பேரழிவை எதிர் கொள்கிறது என்று அவர்  தெரிவித்தார்.