#Breaking: செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் – பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.!

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிச்சன்னா பல்லு எல்லாம் வெளியே வந்துரும் என்றும் நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என கடுமையாக தாக்கி மிரட்டல் விடுப்பதுபோல் பேசியிருந்தார். இதற்கு திமுக … Read more

சைக்கிளில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை!

அரவக்குறிச்சி தொகுதிக்கு சைக்கிளில் சென்று பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று அரவக்குறிச்சி தொகுதிக்கு சைக்கிளில் சென்று அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்தார். இவருடன் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும் சைக்கிளில் அண்ணாமலையுடன் சேர்ந்து சென்றுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.