விமானங்களில் அவசரகால அறிவிப்பு – உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அனைத்து மொழிகளிலும் அறிவிக்க கோரி வழக்கு. விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத 50% பயணிகள் அவசரகால முன்னெச்சரிக்கைகளை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.