போராட்டத்தை முடித்து கொண்டு சொந்த ஊர் கிளம்பிய விவசாயிகள்…!
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டு விவசாயிகள் சொந்த ஊர் கிளம்பியுள்ளனர். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தது. இதற்க்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டது. … Read more