சிரியா மருத்துவமனையில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலி..!

சிரியாவில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற இரு ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நடந்த ஏவுகணை தாக்குதல் குறித்து சிரியன் அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாவது: கடந்த சனிக்கிழமையன்று, சிரியாவில் அஃப்ரின் நகரத்தில் இருக்கும் அல்-ஷிபா  மருத்துவமனையில் இரண்டு ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இதில் அவசரகால பிரிவு அறை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் மருத்துவப்பணியாளர்கள் மற்றும் இருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் … Read more

வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) ந‌க‌ரை குர்திஸ் YPG ப‌டையின‌ரிடம் இருந்து கைப்பற்றிய துருக்கி படை…!!

வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) ந‌க‌ர‌ம் துருக்கிப் ப‌டையின‌ர் வ‌ச‌ம் வீழ்ந்து விட்ட‌து. இதுவ‌ரை கால‌மும் குர்திஸ் YPG ப‌டையின‌ர் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ அப்ரின் ந‌க‌ரில் த‌ற்போது துருக்கி கொடி ப‌ற‌க்கிற‌து. துருக்கி ப‌டைக‌ள் அப்ரின் ந‌க‌ரை கைப்ப‌ற்றுவ‌த‌ற்காக‌‌ ந‌ட‌ந்த‌ யுத்த‌த்தில், இதுவ‌ரையில் 300 க்கும் அதிக‌மான‌ பொதும‌க்க‌ள் பலியாகி உள்ள‌ன‌ர். ஒரு இல‌ட்ச‌த்து ஐம்ப‌தாயிர‌ம் பேர் இட‌ம்பெய‌ர்ந்துள்ள‌ன‌ர். அப்ரின் மீதான‌ வெற்றியை பிர‌க‌ட‌ன‌ம் செய்துள்ள‌ துருக்கி ஜ‌னாதிப‌தி எர்டோகான், “த‌ம‌து ப‌டையின‌ர் 3000 … Read more