கர்நாடகாவில் பரபரப்பு…தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு.!

Karnataka ACID

Karnataka: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மங்களூரு நகருக்கு அருகில் உள்ள கடப்பாவில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது தெரிய வந்துள்ளது. READ MORE – பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி கல்லூரியின் வளாகத்தில் பல்கலைகழகத்திற்கு முந்தைய பாடப்பிரிவு (பியுசி) தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது, இந்த … Read more

#Delhi Acid Attack: Flipkart, Amazon நிறுவனங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில் Flipkart மற்றும் Amazon நிறுவனங்களுக்கு நோட்டீஸ். டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக Flipkart மற்றும் Amazon நிறுவனங்கள் ஆன்லைனில் ஆசிட் விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள துவாரகாவில் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது பள்ளி (12ம் வகுப்பு) மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் … Read more

காதலன் மீது ஆசிட் வீசி கத்தியால் குத்திய காதலி ..!

கோவையில் காதலன் மீது ஆசிட் வீசி கத்தியால் குத்திய காதலி கோவை பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் மீது ஆசிட்டை வீசிய காதலி கத்தியாலும் காதலனை குத்தியுள்ளார். லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞருக்கு ஆசிட் வீசிய திருமணமாகிய பெண் …!

திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ள பெண்ணொருவர். இளைஞர் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவருக்கு ஆசிட் வீசியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி அடுத்த அடிமாலி எனும் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் தான் ஷீபா. இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக பேஸ்புக்கில் பேசி வந்த இருவரும் அதன்பின் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இந்நிலையில் ஷீபாவுக்கு … Read more

காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசி கொலை!

காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள பாவனா எனும் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மோண்டு எனும் இளைஞர் திருமணமான ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணிடம் சென்று தான் அவரை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் அடிக்கடி கூறி வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் … Read more

செவிலியர் மீது ஆசிட் வீசியவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

செவிலியர் மீது ஆசிட் வீசிய மணிகண்டன், விஜயகுமார் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை. திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது ஆசிட் வீசப்பட்டது. பிரசவத்திற்காக தனது மனைவியை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மணிகண்டன் என்பவர் அனுமதித்து இருந்தார். பணியிலிருந்த செவிலியர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு மணிகண்டன் மனைவி அனுப்பி வைத்தார். திருச்செங்கோட்டில் மணிகண்டனுக்கு பிறந்த குழந்தை இறந்ததால் செவிலியர் மீது ஆசிட் வீசப்பட்டது. செவிலியர் மீது ஆசிட் வீசிய இரண்டு பேருக்கு … Read more

ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காத்ததால் மனைவி மீது அசிட் அடித்த கணவர்!

மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை எனும் ஆத்திரத்தில் பஞ்சாபை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி மீது ஆசிட் வீசி கொல்ல முயற்சி செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா என்னும் மாவட்டத்தில் உள்ள விவசாயி ஒருவர் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை எனும் ஆசையில் தனக்கு இன்னும் ஒரு … Read more

வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு ஆசீட் அடித்த இளைஞர் – காரணம் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்!

தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் இளம்பெண் மீது ஆசிட் அடித்த இளைஞர் உத்திரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய காலத்தில் இளம்பெண்கள் இளைஞர்களுடன் நட்பாக பழகுவதும் காதல் வயப்பட்டு பேசுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த உறவு முறிந்து விடும் பட்சத்தில் சில ஆண்கள் கண்மூடித்தனமான கோபத்தில் தவறான முடிவுகளையும் எடுத்து விடுகின்றனர். சிலர் தங்களை தாங்களே மாய்த்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் விலகிச் சென்ற பெண்களை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கொலை … Read more

8 வருட காதல் – திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி!

8 வருட காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா எனும் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்மணி தான் சாந்தல். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பள்ளி பருவம் முதல் எட்டு வருடம் காதலித்து வந்துள்ளார். புனேவில் கடந்த 2 வருடமாக இப்பெண் வேலை பார்த்து வருகிறார். அண்மையில் அப்பெண்ணை புனேவில் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி … Read more

காதலி-காதலியின் சகோதரிகளின் மீது ஆசிட் வீச்சு! ஒருதலைக்காதலன் வெறிச்செயல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று சகோதரிகளின் முகத்தில் ஆசிட் வீசிய ஒரு தலைக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தலீத் சிறுமிகள் மூன்று பேரும் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஆசிஷ் என்பவர் அவர்களின் முகத்தில் அமிலத்தை வீசியதாக கூறப்படுகிறது. சகோதரிகளில் மூத்த பெண்ணின் கண்கள் அமில வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அமிலத்தை வீசி விட்டு தப்பியோட முயற்சித்த ஆஷிசை சுட்டு பிடித்தனர். இந்நிலையில் … Read more