26 வயதான பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

33 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி. 26 வயதாகும் பெண்ணின் 33 வார கருவை கலைக்க, அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருவை கலைக்க மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும் பெண்ணின் கோரிக்கையை ஏற்று டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் கருத்து தெரிவித்துள்ளார். கருவிற்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பது … Read more

#BREAKING: கருக்கலைப்பு.. அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் விரிவான தீர்ப்பு அளித்துள்ளார். அதன்படி, சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்ய தகுதி உடையவர்கள் ஆவார்கள். திருமணமான, ஆகாத அனைத்து பெண்களும் … Read more

சட்டபூர்வமான கருக்கலைப்புக்கு அனுமதி அளித்த மூன்று நாடுகள்!இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என்று 1973-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த மைல்கல் ரோ வெர்சஸ் வேட் முடிவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் வரைவு அறிக்கை தயார் செய்து வருவதாக கூறப்படும் ஆவணம் ஒன்று நேற்று அமெரிக்காவில் கசிந்தது.இது அமெரிக்க பெண்கள் மற்றும் சமூகநலச் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியது.இதனால்,பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் செய்தி அமெரிக்க கருக்கலைப்புச் சட்டங்களை மத்திய கிழக்கில் உள்ள சட்டங்களுடன் … Read more

கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை பெண்களுக்கு உண்டு – கேரள உயர்நீதிமன்றம்!

பெண்களுக்கு கருக்கலைப்பு சட்டப்படி தங்கள் கருவை கலைப்பதற்கு உரிமை உள்ளது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், அவரது வயிற்றில் வளர்ந்து வரக்கூடிய சிசு குறைபாடு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து 22 வாரங்கள் வளர்ச்சியடைந்துள்ள இந்த சிசுவை கலைப்பதற்கு கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மனநலம் பாதிக்கப்பட்ட … Read more

3-வதும் பெண்குழந்தை என்பதால் மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்த கணவன்..!

தனக்கு பிறக்கவிருக்கும் 3 ஆவது குழந்தையும் பெண்குழந்தை என்று தெரிந்த காரணத்தால் வீட்டில் வைத்து தனது மனைவியின் வயிற்றை அறுத்து கருவை கலைத்துள்ள கணவன்.  கர்நாடக மாநிலத்தில் விஜயாபுரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி அரவிந்த், விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அரவிந்த் தனக்கு ஆண் குழந்தை பிறக்கபோகவதாக உறவினர்களிடம் தெரிவித்து வந்துள்ளார். அதன் பிறகு, வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ள … Read more

6 மாத கருவை கலைக்க மனைவிக்கு விஷம் கொடுத்த ராணுவ வீரர் குடும்பம் -பெண்ணும் உயிரிழந்த சோகம்!

6 மாத கருவை கலைக்க மனைவிக்கு விஷம் கொடுத்த ராணுவ வீரர் குடும்பத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை என்னும் பகுதிக்கு அடுத்த வக்கணம்பட்டி சேர்ந்த சிவா என்பவரின் மகள் சத்தியவதனா என்பவருக்கும், ஆண்டியப்பனூரை சேர்ந்த ராணுவ வீரரான மணிவண்ணன் என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றுள்ளது. ராணுவ வீரராக பஞ்சாபில் பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தனது மனைவியையும் பஞ்சாப்புக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி 6 மாத கர்ப்பிணியாக … Read more

டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடிப்பு!

டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடித்த காதலன் மற்றும் குடும்பத்தினர். சென்னையிலுள்ள வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராணிப்பேட்டை செங்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது சாந்தகுமார் என்பவருக்கும் டிக் டாக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால், சிறுமியை வீட்டை விட்டு வெளியே வர சொன்ன சாந்தகுமார் தனது பெற்றோர் சம்மதத்துடன் … Read more