ஆருத்ரா மோசடி.. இன்று விசாரணைக்கு ஆஜராகும் ஆர்.கே சுரேஷ்!

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு ரூ.35 ஆயிரம் 10 மாதத்திற்கு வட்டி தரப்படும் என கூறினர். இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்தனர். ஆருத்ரா நிறுவனம், வட்டியும் வழங்காமல், அசலும் வழங்காமல் மோசடி செய்தது அம்பலமானது. அதன்படி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ. 2438 … Read more

ஆருத்ரா இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதில் முன்னுரிமை தரவேண்டும் என்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்தியவர்களுக்கு அடுத்த கட்டமாக முன்னுரிமை தந்து பணத்தை தரவேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.மேலும், கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால நிவாரணம் அளித்தும், … Read more

#BREAKING: ஆருத்ரா கோல்டு நிறுவனம்; 70 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் உள்ளிட்ட 70 பேரின் வங்கி கணக்குகளை முடக்கிய காவல்துறை. ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் உள்ளிட்ட 70 பேரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் பாஸ்கர், மோகன் பாபு ஏற்கனவே கைதான நிலையில், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா வழக்கு விசாரணை அதிகாரியாக பொருளாதர குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆருத்ரா நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்ட … Read more